தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கெளமாரியம்மன் திருக்கோவில் உலகில் மிக பிரசித்திபெற்ற திருக்கோவில் ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை .தற்பொழுது கோவிட் தொற்று குறைந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சித்திரை திருவிழா தொடங்கியது . மேலும் கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது
இந்த தேரோட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் சரக டிஐஜி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தேனி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதாசசி ஆகியோருடன் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் தேனி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி