Type Here to Get Search Results !

தேனியில் சிலம்பாட்ட வீரர்களுக்கு மாஸ்டர் பட்டம் கொடுக்கும் விழா நடைபெற்றது

தேனியில் சிலம்பாட்ட வீரர்களுக்கு மாஸ்டர் பட்டம் கொடுக்கும் விழா நடைபெற்றது 

சிலம்பாட்டத்தின் வரலாறு 

சிலம்பம் என்பது தமிழர்களின் பூர்வீக விளையாட்டுக்கலையாகும் .எதிரிகள் இடமிருந்தும் விலங்குகள் இடமிருந்தும், சிலம்பக் கலைகளை கற்றுத் தேர்ந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வந்துள்ளனர். தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் சிலம்பாட்ட கலைகளை விடுதலை போராட்ட வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்துள்ளனர்.


குறைந்தபட்சம் இரண்டு பேர் ஆடக்கூடிய இந்த சிலம்பாட்ட கலையில் பல்வேறு சிலம்பு ஆசைவுகள் ஆட்டம் உள்ளன. இந்த சிலம்பாட்ட பயிற்சியில் முன்னோர் காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த இந்த ஆட்டத்தில் தற்பொழுது பெண்களும் மிக ஆர்வத்துடன் சிலம்பாட்ட கலைகளை கற்று தேர்ச்சி பெற்று உள்ளனர்  .

மேலும் தமிழக அரசு சார்பிலும் சிலம்பாட்ட கலைகள் அழியாமல் இருப்பதற்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இதனால் தற்பொழுது அனைத்து மாணவர்களும் சிலம்பாட்ட கலைகளை கற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

 சிலம்பாட்டக் கலைகளில் முதலில் மாணவர்களாக சேர்ந்து பல்வேறு சிலம்பாட்ட கலைகளை தேர்ச்சி பெற்ற பின்பு அவர்களுக்கு மாஸ்டர் என்ற அந்த பட்டம்  கொடுக்கப்படுகிறது அதன்பின்பு பல்வேறு மாஸ்டர்களை உருவாக்கும் சிலம்பாட்ட கலை வீரர்களுக்கு ஆசான் என்ற பட்டத்தை வழங்கி வருகிறார்கள்


 இதே போல் தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் செயல்பட்டு வரும் பாண்டி சிலம்பம் பயிற்சி பள்ளியில் மிகச் சிறப்பான முறையில் கற்றுத் தேர்ந்த 14 மாணவர்களுக்கு சிலம்பம் மாஸ்டர் பட்டம் கொடுக்கும் விழா நடைபெற்றது   

   தேனி அருகே அல்லி நகரத்தில் பாண்டி சிலம்பாட்ட பயிற்சி பள்ளி சார்பாக சிலம்பாட்ட  மாணவர்களுக்கு சிலம்பாட்டம் போட்டிகள் மற்றும் சிலம்பாட்டத்தில் தேர்ச்சி பெற்ற  சிலம்பாட்ட மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் விழாவில்

தேனி காவல்துணை கண்காணிப்பாளர் பால் சுதர் , வனசரக அலுவலர் சாந்தகுமார் ,வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி ஆகியோர் தலைமையிலும் 

ஊராட்சி மன்ற தலைவர்கள் பிச்சை, பாண்டியம்மாள், பஞ்சாமணி, DSR மார்க்கெட்டிங் தெய்வேந்திரன், GVB குருப் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழாவில் சிலம்பாட்ட விழாவில் 14 மாணவர்களுக்கு மாஸ்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.





விழா ஏற்பாடுகளை ஆசான் சிலம்பம் பாண்டி, சிலம்பம் மாஸ்டர் கண்ணன் ஆகியோர்  செய்திருந்தனர் . இந்த நிகழ்வில் சிலம்பம் கவிதா,



சிலம்பம்பிரவீன், சிலம்பம் யுவேஷ், கபிலன் ,கனிஷ்கா,தமிழ் குமார், நேசிகா ஸ்ரீ, சக்திதார்,மயில்வானன் மற்றும் பலர் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.