தேனி அருகே கொடுவிலார்பட்டியில் ஸ்ரீ சுயம்பு கன்னிமார் திருக்கோவில் கும்பா அபிக்ஷேகா விழாவினை முன்னிட்டு பிறந்த வீட்டு பிள்ளைகளை அழைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் மிகவும் பழைமையான ஸ்ரீ சுயம்பு கன்னிமார் திருக்கோவில் கொடுவை -வீரபாண்டி கோவில் சாலையில் அமைந்து உள்ளது. இந்த திருக்கோவிலில் பல வருடங்கள் கழித்து இந்த திருக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கான ஏற்படுகள் நடைபெற்றன .
மேலும் இந்த கும்பாபிஷேக விழாவின் முதல் நிகழ்ச்சியாக (10-8 - 2022) அன்று முகூர்த்த க்கால் நாடும் நிகழ்ச்சி நடைபெற்றன .
கும்பா அபிக்ஷேக விழாவில் புனித திருத்தம் எடுத்து வருடம் நிகழ்ச்சியும் புற்று மண் எடுத்து வரும் நிகழ்ச்சியில் முளைப்பாரி எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து பிறந்த வீட்டு பிள்ளைகள் கிராமப் பெரியோர்கள் அணைவரையும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கொடுவிலார்ப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிறந்த வீட்டு பிள்ளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது
அதனை தொடர்ந்து ஊர் பெரியவர்கள் அனைவரையும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் ,அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து ஊர்வலமாக பிறந்தவிட்டு பிள்ளைகள் மற்றும் ஊர் பெரியவர்களை அழைத்து வந்து திருக்கோவிலுக்கு அளித்துவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு முழுவதும் யாகசாலை பூஜை 108 மூலிகைகள் கனி வகைகள் வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .காலை 8:30 மணியளவில் அருள்மிகு சுயம்பு கன்னிமார் கோவிலுக்கு பல்வேறு திருத்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரினை கொன்டு பூஜிக்கப்பட்ட கும்பத்திற்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது .காலை 9 மணி முதல் இந்த கும்பா அபிஷேக திருவிழாவில் கலந்து கொண்ட உள்ளூர் வெளியூர் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று வேலைகளிலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தொட்டூர் கும்பு தாயாதிகள் & நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி