சென்னையில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் செல்ல வேண்டுமா எவ்வளவு கட்டணம் தெரியுமா?
உலகத்தில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து முதலில் நடைபயணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் . மேலும் சைக்கிள், இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் ,நான்கு சக்கர வாகனங்கள் என தரை வழி போக்குவரத்து மூலம் பல்வேறு போக்குவரத்துகளை பயன்படுத்தி வந்த நிலையில் நீர்வழி மூலம் கப்பல் செய்து பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் வான்வெளி மூலம் விமான போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர் .அந்த வகையில் இந்த கட்டுரையில் கப்பல் மூலம் இலங்கை செல்வதற்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை பற்றி இந்த கட்டுரைகள் பார்க்கலாம் .
இந்தியா - இலங்கை
மத்திய அரசு சாலை போக்குவரத்தினை மேம்படுத்துவதினைப்போல் நீர்வழிப் போக்குவரத்தையும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது தற்பொழுது மாநிலம் விட்டு மாநிலம் என்ற அடிப்படையிலும் நாடு விட்டு நாடு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சுற்றுலா பயணிகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்த விதமாக இந்திய அரசு சார்பில் கப்பல்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது .இதன் அடிப்படையில் முதலில் சென்னை பகுதியில் உள்ள துறைமுகம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் இயக்குவதற்காக மத்திய அரசு சார்பில் கார்டில்யா என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது இதனால் கார்டில்யா நிறுவனம் சார்பில் வருகின்ற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் இந்தியாலிருந்து இலங்கைக்கு அனைத்து வசதிகளும் இருக்க கூடிய கப்பல் இயக்கப்படுகிறது. சென்னை துறைமுகம் கடற்பகுதியிலிருந்து செல்லும் இந்த கப்பலானது திரிகோணமலை , காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் ,கொழும்பு ,மற்றும் பல்வேறு இடங்களுக்கு சொல்கிறது.
எவ்வளவு ரூபாய்
மேலும் இந்த கப்பலில் மூன்று நாள் பேக்கேஜ் ஆக பயணிக்க விரும்பும் தம்பதிகளுக்கு ரூபாய் 85 ஆயிரம் ரூபாய் கட்டணம் இந்த கப்பல் மூலம் வசூலிக்கப்படுகிறது .இந்த கப்பல் மூலம் பயணம் செய்யும் நேரம் சென்னையிலிருந்து 24 மணி நேரத்துக்குள் இலங்கை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று விடும்.
எவ்வளவு பயணிகள் செல்லலாம்
மேலும் இந்த கப்பல் மூலம் ஒரே நேரத்தில் 1600 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் ,கப்பல் போக்குவரத்தினை வளர்ச்சி அடைய செய்வதற்கும் ,மக்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து விதமாக ஊக்கப்படுத்தும் விதமாக விரைவில் சென்னையிலிருந்து கொச்சி, மும்பை மற்றும் பல்வேறு இடங்களுக்கு பயனியர் கப்பல்கள் விரைவில் இயக்கப்பட உள்ளது என்றும் அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது..
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி