தேனி மாவட்டத்தில் பனை விதை நடும் பணிகளை ஊக்குவிக்கும் தம்பதிகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் க. விலக்கு - கண்டமனூர் சாலை திருமாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் அர்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் அர்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றனார். மதுபோதைகளினால் ஏற்படும் தீமைகளை பற்றியும் , இளைய தலைமுறையினர் நல்ஒழுக்கங்களை பேணி காக்கும் வகையில் இளைஞர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மேலும் இளைஞர்கள், பொது மக்கள் ,இளைஞர்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை செயல்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ஆண்டிபட்டி வட்டத்தில் இயற்கை வளங்களை பேணிக்காக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்து இயங்கை வளங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள பந்துவார்பட்டி விலக்கில் குளத்துக்கரை கண்மாயில் இயற்கை வளங்கள் பெருகுவதற்கும் மழையின் அளவு உயர்வதற்கும் பனை விதை நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பனை விதை பணிகளை பல்வேறு நீரோட்டம் உள்ள கண்மாய்களில் பனை விதை நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் குளத்துக்கரை கண்மாயில் பனை விதை பணி நடைபெற்றது. இந்த பனை விதை நடும் பணியானது ஆண்டிப்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் வரதராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி பங்கேற்று பணி விதை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி சிறப்புரையாற்றும் பொழுது :
அரசு பணிகள் அதிக அளவு இருந்தும் மரம் நாடும் விழாவில் பங்கேற்பது பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ,அதேபோல் இந்த பனைவிதை நடும் பணிகளில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் , தொண்டு நிறுவனங்கள் , பங்கேற்றதினால் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், பனை விதை நடும்பணிகளிலும் , மரக்கன்றுகளை நடும் பணிகளிலும், இளைஞர்கள் ,பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்றும் , அர்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் சார்பில் நடத்தப்படும் பணை விதை நடும் பணிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர் சித்திரா தேவி கூறும்
இயற்கை வளங்களை பேணிக்காப்பதில் அர்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் செயல்பட்டு இருப்பதினை போல் பொதுமக்கள் அனைவரும் ஈடுபடவேண்டும், என்று கூறினர்
ஒன்றிய பெருந் துணைத் தலைவர் TRN வரதராஜன் சிறப்புரையாற்றும் பொழுது
உயிரினங்கள் வாழ்வதற்கு மிக முக்கிய தேவையாக காற்று உள்ளதை போல் அனைவரும் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகளில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த பனைவிதை நடும் பணியில் வனத்துறை அலுவலர்கள், வேளாண்மை தோட்டக்கலை அலுவலர்கள் , சோலைக்குள் கூடல் அரக்கட்டளை ,முல்லைபெரியாறு பாசன சங்க நிர்வாகிகள், சங்கமம் அறக்கட்டளை , வின்னர் ஸ்போர்ட்ஸ், ஜீவன் டிரஸ்ட், ரெட்கிராஸ் சொசைட்டி, கர்ணல் பென்னிகுக் உழவர் மன்றம், ராசி தொண்டு நிறுவனம், சுக்ரா டிரஸ்ட், தேனீக்கள் அறக்கட்டளை, இளங்குரல் பவுண்டேசன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,.என ஏராளமான சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்
அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் R சதிஷ் வரவேற்பு உரையும் ,இணை இயக்குனர் வனிதா சதீஷ் நன்றி உரையும் நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆசிக் நிகழ்த்தினர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி