தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் திங்கட்கிழமை (11 -12 -2023) அன்று நடக்கவிருந்த பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மேலும் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டுதிருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இந்த மிக்ஜாம் புயலால் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்கள் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது .இதனால் பள்ளி மாணவர்களின் நலனை கற்றுக் கொண்டு திங்கட்கிழமை 11 12 2023 அன்று பள்ளி மாணவர்களுக்கான தேவையான பாட புத்தகங்கள் சீருடை உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்றும்,டிசம்பர் 12ஆம் தேதி அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிதாக நோட்டு புத்தகங்கள் உட்பட அத்தியாவசியமான கல்வி பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரையாண்டு தேர்வு திங்கட்கிழமை 11 -12- 2023 அன்று நடைபெற இருந்த நிலையில் மாணவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களால் அரையாண்டு தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதமுடியாத சூழ்நிலை உள்ளதால் டிசம்பர் 12ஆம் தேதி அன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று அரையாண்டு தேர்வு தொடங்கும் என தமிழக முதல்வரால் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையில் தயாரிக்குமாறும் கல்வித் துறைக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி