தேனியில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா , கவிஞர்களுக்கு கவிச் சுடர் விருது வழங்கும் விழா

தேனி அல்லி நகரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தேனி மாவட்ட விளையாட்டு கழகம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் இணைந்து கவிஞர் அம்மு ராகவ் எழுதிய ஆதிலா கவிதை நூல் குறித்த ஆய்வுரை மற்றும் சர்வதேச அளவில் சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்வில் தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் தேனி மாவட்ட விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பெஸ்ட் ரவி முன்னிலையில் நடைபெற்றது. இஸ்கப் மாநில துணை பொது செயலாளர் பாஸ்கரன் ,
தேனி மாவட்ட அரிமா சங்கத்தின் தலைவர் கண்ணன் ,தேனி மாவட்டத்தின் முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் ,தேனி வைகை அரிமா சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் ,தேனி அரிமா சங்கத்தின் பொருளாளர் சரவணன் ராஜா
,ராஜேஷ் கண்ணா, தேனி வைகை அரிமா சங்கம் கணேசன், தேனி அரிமா சங்கம் டைரக்டர் ஜெகன், தேனி மாவட்ட விளையாட்டு கழகத்தின் பொருளாளர் சோல்ஜர் அகாடமி சின்னச்சாமி ,முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் பாண்டியன்,
பேராசிரியர் முனைவர் பத்மினி பாலா, ஆகியோர் சர்வதேச அளவில் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள் .
மேலும் தேனி மாவட்ட விளையாட்டு கழகத்தின் கௌரவத் தலைவர் கலா பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் , சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தார். வையை தமிழ்ச் சங்கத்தின் இளங்குமரன் சிறப்புரையாற்றிய இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விழா தொகுப்புரையை விசாகன் ஆற்றினார்
விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் தேனி மாவட்ட விளையாட்டு கழக செயலாளர் சிவக்குமார் நன்றி உரை நிகழ்த்தி விழாவை முடித்து வைத்தார். மேலும் இந்த பாராட்டு விழாவில்நேபாளத்தில் நடைப்பெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற ஹரி ராம், ரக்ஷிதா பாரதி ஆகியோருக்கு பாராட்டு நினைவு பரிசு மற்றும் கவிஞர்கள் அம்மு ராகவ் , பத்மினி பாலா, ஆகியோருக்கு கவிச் சுடர் விருதும் வழங்கப்பட்டது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி