Type Here to Get Search Results !

தேனி அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

 தேனி அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை


தேனி அருகே உள்ள வயல் பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மதுராமலிங்க சௌடாம்பிகா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு தினசரி சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு  பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழா முடிந்தவுடன் உலக நன்மைக்காக கிராமத்தில் உள்ள தாய்மார்கள் பங்கேற்று 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மேலும் இந்த திருவிளக்கு பூஜைகளில்  உலக நன்மைக்காக பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன இந்த பூஜைகளில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மந்திரங்களை ஓதி வழிபட்டனர் இந்த பூஜையில் பங்கேற்ற அனைத்து நபர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அணைத்து நபர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.