Type Here to Get Search Results !

தேனியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கோலாகாலாமாக கொண்டாடப்பட்டது

 தேனியில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவினை  முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கோலாகாலாமாக  கொண்டாடப்பட்டது 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பட்டாசு வெடித்தும்,  கொடியேற்றியும்  கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .

இதேபோல் தேனி நகரம் சார்பில் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலும், தேனி நகர துணை செயலாளரும் ,புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளருமாகிய  சுந்தர பாண்டியன் முன்னிட்டு அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது .


முதலில் தேனி நேரு சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின்  திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியினை ஏற்றி  அப்பகுதியில் உள்ள  பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது .இதே போல் தேனி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றியும்  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது .மேலும் 

தேனி நகர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில்   தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் தனலட்சுமி சொக்கலிங்கம்,

தேனி நகர் அவை தலைவர் டெய்லர் கே.முருகேசன்,தேனி நகர பொருளாளர் மூ.வீரமணி Ex.MC, தேனி நகர இணை செயலாளர் ராஜேஸ்வரி இளையராஜா, தேனி நகர மாவட்ட பிரதிநிதி

Mk.கண்ணன்,தேனி நகர மாவட்ட பிரதிநிதி Rs.சுரேஷ்,

தேனி மாவட்ட வர்த்தகர் பிரிவு துணை செயலாளர் ஆப்பிள் முருகன் ,தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்தர், தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் G.தினேஷ்குமார் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேனி நகர கிளை செயலாளர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்றனர்



இதேபோல் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரில் அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51வது தொடக்க ஆண்டு விழாவை முன்னிட்டு கண்டமனூரில ஜல்லிக்கட்டு முக்கு பகுதியில்    அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


 அதனை தொடர்ந்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி ஏற்றி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கணடமனூர் கிளைச் செயலாளர் பொன் முத்து , ஒன்றிய முன்னாள் சேர்மன் சந்திரா சந்தோஷ், ஒன்றிய பிரதிநிதி போஸ் என்ற ராஜேந்திரன் ,




ஒன்றிய இளைஞர் இலக்கிய அணி பால்சாமி, இளைஞர் அணி துணை செயலாளர் தங்கவேல், முன்னாள் தேனி மாவட்ட கூட்டுறவு சங்க இயக்குனர் ஐயப்பன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் பிச்சை பாண்டி ,ஒன்றிய பிரதிநிதி சுப்புராஜ் ,சுப்பிரமணியம், தங்கவேல் ,கிளை செயலாளர் சுருளி, முருகன் ,கதிர் சாமி அடைக்கலம் மற்றும் கண்டமனூர் பகுதியை சேர்ந்த அனைத்து வார்டு கிளைச் செயலாளர் என ஏராளமான பங்கேற்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.