விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளையும் பல்வேறு மானியங்கள் அறிவித்து வருகின்றனர் மேலும் மாணவர்கள் உயர் கல்வி வரை படிக்கும் வகையில் பல்வேறு படிப்புகளுக்கு உதவி தொகையும் வழங்கப்பட்டு வருகிறது இதே போல் விபத்தில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தொடக்க கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்து காரணமாக உயிர்களுக்கு பலத்த காயம் சிறிய காயம் போன்றவற்றில் பாதிப்படையும் போது ஒரு லட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் இந்த தொகை வழங்க தொடக்க கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அரசாணை நிலை எண் 65 4 3 2024 G.0 (MS) No: 65 Dated 4.3.2024ன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர் பாரவிதாக விபத்து ஏற்பட்டால்
அந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூபாய் ஒரு லட்சம் என்றும் பலத்த காயம் ஏற்பட்டால் ஐம்பதாயிரம் என்றும் சிறிய காயம் ஏற்பட்டால் ரூபாய் 5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் விபரங்களுக்கு
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி