தேனி அருகே வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் சுவாமி தரிசனம்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டும் தேனி ஒன்றியத்துக்கு உட்பட்டும் உள்ள வீரபாண்டியில் உலகில் மிக பிரசித்திபெற்ற கௌமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்திரை திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றன .இந்த சித்திரை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் பக்தர்கள் அக்னி சட்டி காவடி எடுத்தால் உட்பட பல்வேறு காணிக்கைகளை தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர் மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமாகிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவிலுக்கு திடீரென சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்
மேலும் அவர்களுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி