ஆண்டிபட்டி அருகே வேலாயுதபுரம் கிராமத்தின் வரலாறும் சன்னாசி கோவில் கும்பா அபிஷேகமும்
இயற்கை சூழல் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலைகள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்களை சூடி மயில் தோகை விரித்தது போல் ஆங்காங்கே பசுமை வயல்களும் மலைக் குன்றுகளும் உள்ளனஇந்த மலைக் குன்றுகள் கிழக்கு தொடர்ச்சி மலை ,மேற்கு தொடர்ச்சி மலை என பலவேறு தொடர்ச்சி மலைகளாக உருவாகி பல்வேறு பகுதிகளுக்கு இயற்கை வளங்களை உருவாக்கும் தாயாக இருந்து இயக்கியின் அன்னையாக மழை பொழிவு நிகழ்வுக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்து வருகின்றன
அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் உருவாகி திண்டுக்கல் மதுரை தேனி என அனைத்து பகுதிகளுக்கும் மேற்குதொடர்ச்சிமலை இயற்கை நிறைந்த மரங்களை கொண்டு சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும் இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டமும் மிக முக்கிய இடமாக விளங்கி வருகிறது இயற்கையின் இருப்பிடமாக இருந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பல்வேறு கிராமங்கள் காணப்படுகின்றன. இந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் இருந்த போதிலும் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல்
மண் மனம் மாறாத கிராமியக் கலைகள் தேவராட்டம் கும்மியாட்டம் சேவையாட்டம் வீரத்தின் அழகாக இருக்கும் சிலம்பாட்டம் என அனைத்து கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழும் இடமாகவும் ,எல்லை காக்கும் முதல் கடவுளாக விளங்கும் சன்னாசி சுவாமியே அருள் வந்து இறங்கிய இடமாகவும் இந்த கிராமம் செயல்பட்டுவருகிறது .
வேலாயுதபுரம்
இவ்வளவு சிறப்புமிக்க இந்த கிராமம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் ,கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமநாயக்கனூர் ஜமீன் எல்லைக்குட்பட்ட பகுதியாக வேலாயுதபுரம் என்னும் கிராமம் திகழ்ந்து வருகிறது.
இந்த கிராமம் உருவான வரலாறு பற்றியும் அதனுடைய விளக்கங்கள் பற்றியும் சன்னாசி சுவாமிக்கு தற்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்வினை பார்க்கலாம்.
கிராமத்தின் அமைவிடம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் கண்டமனூர் கிராமத்துக்கு உட்பட்ட கிழக்குப் பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த கிராமமானது மாவட்ட தலைநகரமான தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், ஆண்டிபட்டி பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கண்டமனூர் பஸ் நிலையத்திலிருந்து சென்று காவல் நிலையத்துக்கு எதிர்ப்புறம் கிழக்குப் பக்கமாக உள்ள சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்றால் இந்த அழகிய கிராமம் காணப்படுகிறது .
மேலும் இந்த கிராமத்திற்கு வரவேண்டுமென்றால் தேனி புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கண்டமனூர் கிராமத்துக்கு செல்லும் அனைத்து பேருந்துகளில் சென்று கிராமத்திற்கு சொல்லலாம் .
மேலும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் கானாவிலக்கு ,எம். சுப்புலாபுரம் விலக்கு ,அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சிட்கோ ,ஆகியவற்றை கடந்து கண்டமனூர் வந்தவுடன் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு பக்கமாக இந்த கிராமம் அமைந்துள்ளது .
வேலாயுதபுரம் பெயர் காரணமும் ஊர் வரலாறும்
இராஜகம்பள சமுதாய மக்கள் மட்டும் வாழும் இந்த கிராமம் சுமார் பத்து தலைமுறைகளுக்கு முன்னால் உருவான கிராமமாக திகழ்கிறது என்று தற்போது உள்ள பெரியவர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர் .அந்த தகவலின்படி இந்த கிராமத்தை சார்ந்த இராஜகம்பள சமுதாய மக்களின் முன்னோர்களில் குஜ்ஜுபொம்முலு என்ற பிரிவினை சேர்ந்த இந்த கிராமத்தின் முன்னோர்கள் வட சீமை எனப்படும் வடஇந்தியாவில் வாழ்ந்து வந்துள்ளனர்.
சன்னாசி தாத்தாவின் திருவிளையாடல் அப்பொழுது தமிழகத்தை நோக்கி இந்த கிராமத்தினை உருவாக்கிய முன்னோர்கள் நடை பயணமாக தெற்கு நோக்கி வந்துகொண்டிருந்தனர்.
மேலும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் சன்னாசி கோவில் அமைத்து தினசரி சிறப்பு பூஜைகளும் செய்து வந்த நிலையில் குஜ்ஜு பொம்மு வம்சத்தை சேர்ந்த இக்கிராமத்தின் முன்னோர்கள் தாத்தா பாட்டி ஆகியோர் தங்களுடைய ஒருசில பொருட்களைக் கூடையில் வைத்துக்கொண்டு நடைபயணமாக தென் தமிழகத்தை நோக்கியும் தென்மாவட்டங்களை நோக்கியும் வருகை புரியும் பொழுது , சில கிலோ மீட்டர் செல்லும் பொழுது அழகிய சுவாமி கல்லொன்று முன்னோர்கள் எடுக்காமலேயே அவர்களுடைய கூடையில் வந்து உட்கார்ந்து கொண்டது. மேலும் அந்த கல்லினை ஆங்காங்கே கீழே இறக்கி வைத்துவிட்டு மீண்டும் நடைபயணமாக மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அந்த சுவாமி சிலையானது அவர்களின் கூடையில் உட்கார்ந்து கொண்டு வந்துள்ளது. நடைபயணமாக வெகு நாட்கள் நடந்து வந்த இந்த பெரியவர்கள் ஜமீன் காலத்திற்கு முன்னால் மாவூற்று வேலப்பர் இருந்த காலத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதிக்கு வருகை புரிந்தனர்.
அப்பொழுதும் அவர்கள் கொண்டு வந்த கூடையில் சுவாமிகள் இருந்ததைப் பார்த்து மீண்டும் நடை பயணம் மேற்கொள்ளும் பொழுது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கண்டமனூர் கிராமத்தின் கிழக்கே அந்த சுவாமி சிலையை கீழே இறக்கி வைக்கும் பொழுது அங்கேயே சுவாமி சிலையானது அமர்ந்து கொண்டார் .
பின்பு வேலாயுதபுரம் கிராமத்தின் குஜ்ஜு பொம்மு வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அந்த சுவாமி சிலை யிடம் விவரம் கேட்டபோது சிலையாக இருந்த சன்னாசி சுவாமி உங்களுடைய வாழ்க்கைக்கு உகந்த இடம் இந்த இடம் என்றும் , இந்தப் பகுதிகள் அனைத்தும் செல்வச் செழிப்பாக உள்ள பகுதியாகும் என்றும் ,உங்களுக்கு தண்ணீர் தேவைக்கு கன்னிமார் கிணறும், விவசாயம் செய்வதற்கு கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை நிலம் உள்ளது என்றும், இந்த மேற்கு தொடர்ச்சி மலைக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக எல்லைச்சாமி ஆகவும் உங்களுக்கு இந்த இடத்திலிருந்து அருள்புரிந்து வருவேன் என்றும் அந்த சன்னாசி சுவாமி பக்தர்களிடம் அருள் வந்து தெரிவித்ததாகவும் இந்த கிராமத்தில் முன்னோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
வேலாயுதபுரம் பெயர் காரணம் இந்த குஜ்ஜு பொம்மு வம்சத்தை சேர்ந்த முன்னோர்கள் சன்னாசி சுவாமியிடம் சென்று இந்த கிராமத்துக்கு அழகிய பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் .அப்பொழுது இந்த கிராமத்துக்கு காக்கும் கடவுளாக நான் இங்கிருந்து வருகிறேன் என்றும் ,தன்னுடைய பெயரை இந்த கிராமத்துக்கு வைக்க வேண்டாம் என்றும், தங்கள் குழந்தைகளுக்கும் பெயர் வைக்க வேண்டும் என்றும் ,இந்த சுவாமி கூறியதாகவும் தெரிவித்தனர் .
மேலும் இந்த கிராமத்தின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவூற்று வேலவவருடன் கலந்து பேசி உங்கள் கிராமத்திற்கு அழகான பெயரை சூட்டுவேன் என்றும் அங்கு சென்று விவரங்களை கேட்டு வருவேன் என்றும் சன்னாசி ஸ்வாமி பக்தர்களிடம்தெரிவித்ததாகவும் தெரிவித்தனர் .
பின்பு இந்த கிராமத்தை சேர்ந்த முன்னோர்களிடம் மாவூற்று வேலப்பரிடம் சன்னாசி ஸ்வாமி சென்று பக்தர்கள் கூறிய கருத்துகளை தெரிவித்துள்ளனர் அப்போது தங்களைத் தேடி வந்த மக்களுக்கு நல்வாழ்க்கையை ஏற்படுத்தி தரவும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தன்னை தேடி வந்ததால் தன்னுடைய வலது கையாக இருந்தும் ,
மக்களின் நலனை காக்கும் வேலை (வேல்) கொண்டு தங்கள் கிராமத்துக்கு வேலாயுதம் என்ற பெயர் வைத்து கொள்ளுமாறு கூறியதாக தகவல் தெரிவித்துள்ளார்
.இந்த வேலாயுதம் என்ற பெயரை வைத்துக் கொண்டு கிராமத்துக்கு திரும்பிய முன்னோர்கள் இந்த கிராமத்துக்கு சென்று குடியேறினார்கள் பின்பு வேலாயுதம் என்று பெயர் வைத்து குடிகொண்ட இந்த கிராமத்து முன்னோர்கள் கால அளவில் வேலாயுதபுரம் என்ற பெயர் மாறியதாக தெரிவித்தனர்
2022 கும்பாபிஷேக விழா குஜ்ஜு பொம்முலு வம்ச தாத்தா பாட்டியுடன் தொடங்கிய இந்த கிராமத்தில் தற்பொழுது 230 தலைக் கட்டுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் காணப்படுகிறது
1986ம் வரும் கம்பம் வைத்தால்
1986 வது வருடம் கம்பம் வைத்து வழிபாடு செய்த இக்கிராமத்து முன்னோர்கள் 2022ஆம் வருடம் மிக சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழாவை நடத்தி சிறப்பித்தனர் .
இரண்டு நாள் திருவிழாஇரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் முதல் நாளின் நிகழ்ச்சியாக வைகாசி உற்சவம் தினத்தில் முப்பத்துமுக்கோடி தேவர்கள் வாழும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பயபக்தியுடன் கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் அனைத்தையும் ஊர் பெரியதான வீட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக பல்வேறு முக்கிய தெருக்களின் வழியாக சென்று திருக்கோவிலை சென்றடைந்தார் .
இந்த ஊர்வலத்தின் போது ஆண்கள் எல்லாரும் தேவதும்தி இசை முழங்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மஞ்சள் பூத்த மலராக மஞ்சள் வேஷ்டியுடன் தேவராட்டம் ஆடியும் , பெண்கள் அனைவரும் அருள்மிகு சன்னாசி சுவாமியினை மனதில் வைத்துக்கொண்டு சன்னாசி யின் திரு வாசகங்களைப் பாடியும் மிக சிறப்பான முறையில் வானத்திலிருந்து இந்த கிராமத்தில் நோக்கும்பொழுது சாரை சாரையாக பக்தர்கள் அனைவரும் வரிசையாக சென்று காவல் தெய்வம் சன்னதி சுவாமியின் திருத்தலத்திற்கு வந்தடைந்தனர்.
பின்பு முக்கத்து முக்கோடி தேவர்கள் வாழ்ந்த பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி சிறப்பு பூஜைகள் செய்து வந்தனர் .அதேபோல் பல்வேறு யாகம் நடத்தியும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கும்பா அபிஷேகம்அதிகாலையில் சிறப்பு பூஜைகள் .சிறப்பு யாகங்களும் நடந்த நிலையில் மறுநாள் காலை ஒன்பது முப்பது மணி அளவில் காவல் தெய்வம் சன்னாசி அய்யனுக்கு மிகச் சிறப்பான முறையில் கப்பிளி நாயக்கர்களும், கோடங்கி நாயக்கர்களும், பூசாரி நாயக்கர்களும்,ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மந்திரங்கள் கூறி தீர்த்தத் தண்ணீர் கும்பத்தின் மேல் ஊற்றி சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழாவை நடத்தினார் கள் .
பின்பு முக்கத்தி முக்கோடி தேவர்களின் அருள் பெறுவதற்கும் சன்னாசி ஐயனின் அருள் பெறுவதற்கும் ஆடவர் களுக்கும் பெண்களுக்கும் பயனளிக்கும் வகையில் தீர்த்தங்களை தெளித்து மிக சிறப்பான முறையில் இந்த விழாவினை நடத்தி வந்தனர் மேலும் இந்த விழாவில் கணேசபுரம் ,சித்தார்பட்டி .தெப்பம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, எட்டப்ப ராஜபுரம் ,கண்டமனூர் ,மரிக்குண்டு, பொன்னம்மாள் பட்டி ஆத்தாங்கரைபட்டி ,ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து சன்னாசி ஐயனின் அருள் பெற்று சென்றனர்
அதேபோல் அறிவுப் பசியை போக்கும் வகையில் மந்திரங்களை கூறிய கோடங்கி நாயக்கர்கள் பூசாரி நாயக்கர் ஊரு நாட்டாமை காரர்கள் கும்பாபிஷேக விழாவினை முடித்துவிட்டு, உடல் பசியை போக்கும் வகையில் மிகச் சிறந்த தானமாக வழங்கி வரும் அன்ன தானத்தையும் தொடங்கி வைத்தார்கள். இந்த அன்னதான நிகழ்ச்சியில் கண்டமனூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அனைத்து கிராம மக்களும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிவாரத்தில் அமைந்துள்ள அனைத்து பகுதி விவசாய பெருமக்கள் அணைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்
இந்த கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி
2022 ஆம் வருடத்தின் முக்கிய தகவல்கள்
காவல் துறையில் ஐந்து நபர்கள்
அரசு போக்குவரத்து துறையூல் நான்கு நபர்கள்,
சத்துணவு - ஒருவர், வழக்கறிஞர் _ஒருவர்
இராணுவம் - இரண்டு நபர்கள்,
கண் மருத்துவமணை - மூன்று நபர்கள்,
மற்றும் பல்வேறு முக்கிய தனியார் துறைகளில் பல்வேறு நபர்கள் பணி புரிந்து வருகிறர்கள்
அரசியியல் துறைகளிலும் பல்வேறு நபர்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றனர்
மேலும் இந்த கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி ஒன்றும் ,சமுதாய கூடம் ஒன்றும் ,சத்துணவுக் கூடம் ஒன்றும் தற்பொழுது வரை நிலவரப்படி இந்த கிராமத்தில் அரசு கட்டடங்களில் இயங்கி வருகின்றன
இந்த வேலாயுதபுரம் கிராமத்தின் தகவல்கள் அனைத்தும் வெளி உலகத்துக்கு கொண்டு வந்த செய்தியினைப் போல் மற்ற . கிராமங்களின் திருத்தலம் - கிராம வரலாறு அடங்கிய தகவல் தொகுப்பினை படித்து பயன் பெறலாம்
நன்றி நன்றி நன்றி
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி