Type Here to Get Search Results !

தேனியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

தேனியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது



தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி அவர்கள் தலைமையிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்



இந்தப் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்


பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு பெற்றோருக்கு பூக்கள் வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள் 


 ஆண்டிபட்டி அருகே கண்ட மனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கல்வித்துறை சார்பில்  அறிவிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது .பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்தி தலைமையில் நடைபெற்ற இந்த  கூட்டத்தில் மயிலாடும்பறை வட்டார கல்வி குழு மேற்பார்வையாளர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார்.



இந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்தலைவராக சுதா என்பவரும் துணைத் தலைவராக கலா என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .மேலும் தலைமை ஆசிரியர் ஒருவர், ஆசிரியர் ஒருவர், கல்வியாளர் ஒருவர், உள்ளூர் பிரதிநிதி இரண்டு நபர்கள். சுய உதவி குழு உறுப்பினர் ஒருவர் ,மாணவர்களின் பெற்றோர்கள் 12 நபர்கள்என உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடையே தமிழக அரசு அறிவித்துள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும் பள்ளியின் வளர்ச்சியினை உயர்த்துவதற்கும் இந்த குழு கூட்டம் நடைபெற்று வருகிறது என்றும்

இந்த உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிக்கு அடிக்கடி  வருகை புரிந்து பள்ளியின் கல்வி தரம் ,வருகைபதிவேடு, உணவு உட்பட அனைத்து துறைகளிலும் நேரடியாக வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர்

கொடுவிலார்பட்டியில் பள்ளி மேலாண்மை மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது


தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி  தலைமையில் நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் மாணவர் இடைநிற்றல் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற




இந்த சிறப்பு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் ராணி வேளாங்கண்ணி உதவி தலைமை ஆசிரியர் ஹரிராம் ஆகிய கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்தும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை வரவேற்றும் சிறப்புரையாற்றினார்கள் .

மேலும் இந்த குழு கூட்டத்தில் குழு தலைவராக திவ்யா என்பவரும், துணை தலைவராக ராதா என்பவரும் உட்பட 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.