Type Here to Get Search Results !

பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுரித்தி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பாஜகவினர்

 பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுரித்தி வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பாஜகவினர் 



 தேனி மாவட்ட பாஜக விவசாய அணியின் சார்பாக பல்வேறு கிராமங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்விணையும், இயற்கை வளங்களை பாதுகாக்க கோரியும்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் .அதே போல் விவசாயிகளிடம் நேரடி சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தி வருகின்றனர் .



இந்நிலையில் மண் வளத்தினை கெடுக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக்  பயன்பாட்டை தவிர்ப்போம் தூய்மை இந்தியாவினை உருவாக்குவோம் விவசாயத்தை காப்போம் என்ற முனைப்புடன் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனார்


.இதே போல் தேனி மாவட்டம் கோட்டூர் நகரில் தேனி மாவட்ட விவசாய அணி தலைவர் தென்றல் சரவணன் தலைமையில் அக்கிராமத்தின்  பொதுமக்களிடம் விவசாயிகளிடம் நேரடியாக வீடு வீடாக சென்று பினாஸ்டிக் ஒழிப்பினை வழியுரித்தி துண்டு பிரசுரங்களை பாஜகவின் வழங்கினார்கள் .



முதல் கட்டமாக இந்த நிகழ்ச்சியை விவசாயியின் மாநிலச் செயலாளர் கோட்டூர் ஜி பி ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக விவசாய அணியின் மாநில அரசு திட்ட பொறுப்பாளர் பாஸ்கரன் ,மாநில செயற்குழு உறுப்பினர் நாராயண பிரபு, ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பினை வலியுரித்தி சிறப்புரை ஆற்றினர்கள் . இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விவசாய அணியின் பொதுச் செயலாளர் மனோகரன் ,மாவட்ட துணை தலைவர்  வாரணாசிராமர் ,மாவட்ட செயலாளர்  ரவி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மேலும் இந்த  நிகழ்ச்சியில் சின்னமனூர் நகர விவசாய அணி தலைவர் ராஜேஷ் ,சின்னமனூர் கிழக்கு விவசாய அணி தலைவர் தங்கதுரை ,தேனி வடக்கு விவசாய அணி தலைவர் கோபி ,மற்றும் கணேசன் மற்றும்பலர் கலந்து கொண்டனர். விசுவ இந்து பரிசுத் அமைப்பாளர் கோட்டூர் அன்பழகன், பி சி பட்டி மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.