Type Here to Get Search Results !

வீரபாண்டியில் அக்காடேஸ்வரி பொன்னர் சங்கர் கோவில் திருவிழா

 வீரபாண்டியில் அக்காடேஸ்வரி பொன்னர் சங்கர் கோவில் திருவிழா


தேனி அருகே வீரபாண்டியில் அக்காடேஸ்வரி பொன்னர் சங்கர் கோவில் ஆடித் திருவிழா நடைபெற்றது . மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முதல் நாளில் வீரபாண்டி கன்னிஸ் வரமுடியார்  திருக்கோவிலிருந்து அம்மன்  கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது .



இரண்டாம் நாளில் பொங்கல் வைத்தால் மற்றும் பக்தர்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்று. அதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இந்த முளைப்பாரி திருவிழாவில் அக்காடேஸ்வரி பொன்னர் சங்கர் திருக்கோவிலில் இருந்து வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் அருகே உள்ள கன்னிஸ் வர முடியார் திருக்கோவில் அருகிலுள்ள முல்லைப் பெரியாற்றில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது.






இந்த நிகழ்ச்சியில் கருப்புசாமி மகாமுனி ,அய்யர், கருப்பாயி, லாடn சன்னாசி, கன்னிமார் தங்க சிவகாமி ,காந்திமதி, மாயவர், சாமமூர்த்தி, சீலைக்காரி, தொட்டியச்சி, பதினெட்டான் ,துள்ளி வெட்டி ஆகிய குல தெய்வங்களின்  வேடமடைந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் மூன்று நாள் நிகழ்வை முன்னிட்டு மூன்று வேளைகளிலும் சிறப்பு அன்னதானமும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.