தேனி அருகே செல்வ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது
தேனி அருகே உள்ள மாரியம்மன் கோவில் பட்டி கிராமத்தில் மிகவும் பழமையான செல்வ விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலினை புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு முதல் நாளில் விநாயகர் பூஜை . வாஸ்துசந்திப் பூஜை, கும்ப அலங்காரம் பூஜை,யாக சாலை பிரவேச ஆரம்ப பூஜை நடைபெற்றது .இரண்டாம் நாளாக செல்வ விநாயகர் திருக்கோவிலில் பல்வேறு முக்கத்து முக்கோடி தேவர்கள் வாழ்ந்த புண்ணிய தளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய நீரினை ஊற்றி மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
பின்பு பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில்பட்டி கிராமத் தலைவர் ராஜராஜன் ,துணைத் தலைவர் ராஜேந்திரன் ,மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி