தேனியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது
தேனி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .முனைவர் பச்சைமால் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்
மாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற பட்டிமன்றமும் ,கவிதை வாசிப்பு போட்டியும், கிராம தெம்மாங்கு பாடல் போட்டியும் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் கல்வி சேவையில் சிறந்து விளங்கிய கல்வி சேவகர் விருது பத்து ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த விருதுகளை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழு முனைவர் சத்திய பாலன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் தமிழ் அறிஞர் விருது, சிறந்த சமூக சேவை விருது, பாரதி கண்ட புதுமைப் பெண் விருது ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன .இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் இந்த நிகழ்வின் துவக்கவுரை நிகழ்த்திய நிகழ்ச்சியில் மாநில செயற்குழு பிரபாகரன் ,கௌரவ தலைவர் ஞானபாரதி, பொருளாளர் கோவர்தன், மாவட்ட துணை செயலாளர் பழனிவேவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்வில் கிராமிய கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் பாடல் ஆசிரியர்கள் கவிஞர்கள் கிராமிய கலைஞர்கள், பொதுமக்கள் மாணவ மாணவிகள் என ஏராளமான பங்கேற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி