Type Here to Get Search Results !

தேனி கிரான்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது

 தேனி கிரான்ட் மாஸ்டர் செஸ்  அகாடமி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது



தேனி என் ஆர் டி நகரில் உள்ள கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி அமைந்துள்ளது இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் இதுவரை ஆயிரக்கணக்கான  சதுரங்க வீரர்களை உருவாக்கி வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் தற்பொழுது தமிழக அரசு சார்பில் சதுரங்கப் போட்டியினை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டுள்ளன

 





இதனை அடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் கிராண்ட் மாஸ்டர் செஸ் பள்ளியில் பயிற்சி பெற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வருகின்றனர் 

இந்த கிரான்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் சதுரங்க வீரர்களை உருவாக்கும் விதத்தில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன இதுவரை 37 மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்ற நிலையில்37வது போட்டியாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சதுரங்க விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் நலனுக்காகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது 




























சமூக சேவை ஆற்றியவர்களுக்கு விருது

செஸ் போட்டியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்கும் ஆசிரியர்கள் கவனிக்கும் விதத்தில் செயல்படும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 37 வது சதுரங்க போட்டி மற்றும் ஆசிரியர் தின விழா முன்னிட்டு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது 

இந்த விருது வழங்கும் விழாவில் தேனி கிரான்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் செயலாளர்  மாடசாமி தலைமையில் இந்த சிறப்பான விழா தொடங்கியது .

அகாடமியின் செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டி துவக்க விழாவில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகடமியின் தலைவர் மாடாசாமி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்.

பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் பள்ளி மாணவர்களை வளர்ச்சிப் பணிகளில் ஊக்குவிக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதத்திலும் நடைபெற்ற இந்த சதுரங்க போட்டி விழாவில் சிறப்பு விருந்தினராகஓய்வு பெற்ற வனசரகர் அமானுல்லா கலந்து கொண்டு இந்த போட்டிகளை துவக்கி வைத்தார்

ஆசிரியர் தினத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருதுகளை தேர்வு செய்து விருது வழங்கும் தொடங்கியது

மாணவர்களின் நலனுக்காக சிறப்பான முறையில் கல்வி பணியாற்றியதற்காகவும்,பொது சேவைகளின் பங்கேற்று சிறப்பான முறையில் அனைவருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்ததற்காகவும் கலை இலக்கியங்களில்  படித்து சாதனை புரிந்ததற்காகவும் பள்ளிகளின் பல்வேறு விளையாட்டு வீரர்கள் உருவாக்கி சாதனை படைத்ததுக்காகவும் சிறந்த ஆசிரியருக்காக விருது கம்மவர் சங்கத்தின் பப்ளிக் பள்ளியின்  முதல்வர் பாலபிரம்மதேவிக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

சிறந்த ஆசிரியர்

சதுரங்க போட்டிகளின் நடுவராக பணியாற்றி பல்வேறு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்கியதற்காகவும், மாணவர்களின் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்து வரும்சதுரங்கப் போட்டியின் மாநில தலைவர் தேனழகன் அவர்களுக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது


பள்ளி மாணவர்களின் பழக்க வழக்கங்களில்  சிறந்த முறையில் பணியாற்றுவதற்காகவும் ,மாணவர்கள் ஒழுக்கம்  பல்வேறு உயர் கல்வி  படிப்புகளுக்கு அடித்தளமாக  துணை புரிந்ததற்காகவும் சிறந்த ஆசிரியருக்கான விருது தேனிநாடார்  சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேஷ்குமாருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் 

மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், விளையாட்டு, ஓழுக்க நெறிகளுக்கு  உறுதுணையாக இருந்து வரும் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி சிறப்பித்த பின்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது

எட்டு வயது பிரிவில்

தர்ஷன்

 நிவாஸ்   சித்திஷ்    ஆகியோருக்கும்

பத்து வயது பிரிவு 

தசரதன் விசாகன் அனீஸ் ஆகியோருக்கும்

12 வயது பிரிவு 

சிவா ரூபன் தாரணிகா ஸ்ரீ தேச வர்ஷன் ஆகியோருக்கும்

14 வயது பிரிவில்

அபிஷா பரணி தரணி ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

மேலும் இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பதக்கங்கள் வழங்கப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் ,அனைவரும் வெற்றி பெற்ற அணைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் .


இதேபோல் கிரான் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது

தேனி கிரான்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில்  நடைபெற்ற முப்பெரும் விழாவில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் பொருளாளர் கணேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. அகாடமியின் செயலாளர் மாடசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில சதுரங்க நடுவர் சையது மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இந்த முப்பெரும் விழாவை ஒய்வு பெற்ற வனசரகர்  அமானுல்லா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

முதலில் முப்பெரும் விழாவின் தொடக்க விழாவாக டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு 38வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது


இந்த சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ,டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் பசுமையாக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது

சிறந்த மாணவி

செஸ் போட்டியினை தொடர்ந்து விளையாட்டு ,கல்வி, ஒழுக்கம் மற்றும் பல்வேறு விதங்களில் சிறந்து விளங்கிய தேனீ கம்மவர் சங்கம் மெட்ரிக் பள்ளி மாணவி தாரணிகா ஸ்ரீ சிறந்த மாணவிக்கான விருது வழங்கப்பட்டது

மேலும் பள்ளி மாணவர்களின் கல்வி ஒழுக்கம் மற்றும் பள்ளி மாணவர்களை சிறந்த முறையில் ஊக்கி வைக்கும் பள்ளிக்கான விருது ஆன்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளிக்கு  சிறந்த பள்ளி விருது வழங்கப்பட்டது   

மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் 38வது சதுரங்கப் போட்டிகளில்

 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 

முதல் பரிசாக தர்ஷன் 

இரண்டாம் பரிசு தேஹந்தி

 மூன்றாம் பரிசு ஹர்சிமிதா,

நான்காம் பரிசு செல்வன் நிரஞ்சன் 

ஐந்தாம் பரிசு ஹ

ஸ்வின் நிவாஸ் ஆகியோருக்கும் 

இளம் சதுரங்க வீரர் என்ற பிரிவில் மோனிஷா என்பவருக்கும் வழங்கப்பட்டது 

10 வயதுக்குட சதுரங்கப்பட்டியில் 

முதல் இடம்மேகா ஆரின், இரண்டாம் இடம் சாய் ரிஷி ,மூன்றாம் பரிசு விசாகன் நான்காம் பரிசு       ஸ்ரீ வர்சன் ஐந்தாம் பரிசு தசரதன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது 












14 வயதுக்குட்பட்ட பிரிவில் முதல் பரிசு ஹர்ஷித் இரண்டாம் பரிசு தரணிகா ஸ்ரீ மூன்றாம் பரிசு வரதான் நான்காம் பரிசு தரனேஸ்வரன் ,ஐந்தாம் பரிசு கமலேஸ்வரன் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழும் விருதுகளும் வழங்கப்பட்டன

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் தேனி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சரவணன் ,நாடார் உறவின் வரை மெட்ரிக் பள்ளி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். செஸ் போட்டிகளினால் அரசு எவ்வாறு மாணவர்களுக்கு சலுகை வழங்குகிறது , மாணவர்களின் வளர்ச்சிக்கு செஸ் போட்டி எவ்வாறு பங்கு வகிக்கிறது என்றும் மாணவருகளிடையே சிறப்புரையாற்றினார்கள்.


மேற்கண்ட முப்பெரும் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற சதுரங்க போட்டியின் நடுவராக அஜ்மால்கன், நூர்ஜகன் ஆகியோர் செய்யப்பட்டனர் மேலும் இந்த முப்பெரும் விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள என ஏராளமான பங்கேற்றனர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.