வீரபாண்டி பேரூராட்சியில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தேனி அருகே வீரபாண்டியில்உள்ள பேரூராட்சியில் மாதந்திர கூட்டம் பேரூராட்சி சேர்மன் கீதா சசி தலைமையிலும் , பேரூராட்சி செயலாளர் ஆறுமுக நாயினர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர் .
மேலும் இந்த கூட்டத்தில் 1,6,8,9,10 ஆகிய வார்டுகளில் கடந்த 1989 ஆம் ஆண்டு கணக்கின்படி குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பற்றாக்குறையினை போக்கும் வகையில் தற்பொழுது புதியதாக கணக்கெடுப்பு நடத்தி அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை போக்கும் வகையில் மேற்க கண்ட வார்டுகளில் குடிநீர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு குடிநீர் பைப்புகள் அமைக்கப்படும் என்றும் ,1,5,6 ஆகிய வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறைய போக்குவதற்காக புதிய போர்வெல் அமைப்பது குறித்தும் உட்பட 14 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள்ஆகியோர் பங்கேற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி