மொய் விழாக்களின் போது மொய் பணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் எதற்காக வைக்கிறோம் தெரியுமா?
பழங்காலத்தில் பண்டம் மாற்றும் முறை இருந்த பொழுது ஒரு பொருளை கொடுத்தால் மற்றொரு பொருள் அதற்காக ஈடு செய்யும் விதத்தில் வாங்கிக் கொள்வோம் .பண்டமாற்று முறைகள் படிப்படியாக உயர்ந்து ஒரு பொருளுக்கு மதிப்பு வைத்து அதற்கு பணமாக கொடுக்கும் காலம் தாப் பொழுது நடைமுறையில் உள்ளது. மேலும் முதலில் உழைப்புக்கு தகுந்தாற்போல் ஊதியமும் பொருட்களின் தகுந்தாற்போல் பணமும் வழங்கி வரும் இந்த காலகட்டத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் ஏராளம். அதேபோல் வீடுகளில் செய்முறைகள் (மொய் ) வைத்து உயர்ந்தவர்கள் இன்று அதிகமானோர் உள்ளனர்.
பல வருடங்களுக்கு முன்பாக வீடுகளில் செய்முறை வைக்கப்பட்டு தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை நாம் 51 ரூபாய் 101 ரூபாய், ஆயிரத்து ஒரு ரூபாய் என்று செய்முறை செய்து வருகிறோம். அதாவது 50 ரூபாய் ,100 ரூபாய் 1000 ரூபாய் என்று இல்லாமல் 51 101, 201,1001 என்ற அடிப்படையில் செய்முறைகள் செய்தி வருகிறோம் அன்று முதல் இன்று வரை ஒருவர் விசேஷ, (மொய்) வீடுகளுக்கு செல்லும் பொழுது வெறும் ஐம்பது ரூபாய் செய்முறை செய்தாலும் 51 என்று செய்முறை செய்வார்கள் .அதேபோல் ஒரு லட்ச ரூபாய் மொய்ப்பணம் வைத்தாலும் அந்த மொய் பணத்துடன் ஒரு லட்சத்து 1 ரூபாய் என்று வைப்பார்கள். இதற்கான காரணங்கள் பண்டைக் காலத்தில் இருந்து இன்று வரை பலருக்கு தெரியாமல் நடைமுறையில் இருந்து வருகிறது.
மேலும் நம் முன்னோர்கள் அந்த ஒரு ரூபாய்க்கான காரணங்கள் பல்வேறு காரணங்களாக சொல்லப்பட்டாலும் கூட அதில் நன்மையும் உள்ளன என்பதை இந்த கட்டுரை மூலம் பார்க்கலாம்
மொய் செய்யும் பொழுது 51 101 101 ஒரு லட்சத்து 1 என்று வரிசையாக ஒன்று ஒன்று ஒன்று ஒன்று என்று தொடர்ச்சியாக இருக்கும்மாறு செய்முறை செய்துவரும் நிலையில், யாரும் 50 100 150 20000 என்று செய்முறை யாரும் செய்வதில்லை. 50 , 100 , 150 , 200, 1 0000 என்று மொய் கணக்கு செய்யும் பொழுது அனைத்து மொழியிலும் ஜீரோ என்று முடிவடைகிறது. ஜீரோ என்றால் எவ்வித பயனும் இல்லை.
மேலும் 51 101 101 என்று மொய் கணக்கில் செய்யும் பொழுது ஒன்று என்று நிறைவு எண் வருவதினால் பூஜ்ஜியத்தை போல் இல்லாமல் ஒரு எண்ணாவது உள்ளது மேலும் ஒன்று என்று இருக்கும் பொழுது வளர்ச்சியின் அடையாளமாகவும் , அடிப்படையின் தொடக்கம் என்று அமைகிறது. அதனால் தான் மொய் கணக்கில் 51 101 என்று எழுதப்படுகிறது மேலும் 50 100 என்று எழுதினால் வாழ்க்கையும் நட்பும் பூஜ்ஜியமாக அமைந்து விடும் என்பதாலும், 51 101 என்று இருந்தால் தான் அந்த ஒன்று என்ற எண்ணினைப் போல் வாழ்க்கையும் தொடங்கும் என்றும் நட்பும் கடைசிவரை உறுதியாக இருக்கும் என்றும் நம் முன்னோர்கள் அன்று முதல் மொய் கணக்கில் 51 101 என்று எழுதி வைத்து வருகின்றனர். நம் முன்னோர்கள் ஒரு செயலை செய்தால் அதில் பல்வேறு காரணங்கள் இருக்கும் என்பதனை இந்த மொய் கணக்கு மூலமே நாம் தெரிந்து கொள்ளலாம்
வேலைவாய்ப்பு, கல்வி, அரசு தகவல்கள் பல்வேறு பல் சுவையான தகவல்களைப் பெற கீழ் காணும் whatsapp இணையதள இணைப்பிற்கு சென்று இணைந்து பயன்பெறலாம்
இந்த இணைப்பின் மூலம் எனது WhatsApp குழுவில் சேருங்கள்:
https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd
https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd
https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி