அரையாண்டு தேர்வு புதிய கால அட்டவணை வெளியீடு 20223
தமிழகத்தில் திங்கட்கிழமை (11 -12 -2023) அன்று நடக்கவிருந்த பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மேலும் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
இந்த மிக்ஜாம் புயலால் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்கள் சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதம் அடைந்துள்ளது .இதனால் பள்ளி மாணவர்களின் நலனை கற்றுக் கொண்டு திங்கட்கிழமை 11 12 2023 அன்று பள்ளி மாணவர்களுக்கான தேவையான பாட புத்தகங்கள் சீருடை உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்றும்,டிசம்பர் 12ஆம் தேதி அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிதாக நோட்டு புத்தகங்கள் உட்பட அத்தியாவசியமான கல்வி பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 13 தேதி முதல் அரையாண்டு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
கீழே உள்ள pdf முகவரிக்கு சென்று புதிய கால அட்டவணையினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
https://drive.google.com/file/d/1Cr0nlD9J4wyaznypCxQmSEC55fabZFVb/view?usp=drivesdk
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி