கால்நடை உதவி மருத்துவ பணிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தின் குறிப்பாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் மாவட்டங்களில் தற்போது கனமழை மற்றும் புயல் அதிகமாக வீசப்பட்டு வருகிறது என்றும் இதனால் தமிழக அரசு சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
என்றும்,இதேபோல் பல்வேறு தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் இதேபோன்று கால்நடை உதவி மருத்துவ பணிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 4ல் நடைபெற இருந்தது. கனமழை மற்றும் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும்
டிசம்பர் 4 திங்கட்கிழமை நடக்க இருந்த நேர்முகத் தேர்வு புதன்கிழமை ஆறாம் தேதியும், புதன்கிழமை அழைக்கப்பட்டிருந்த நேர்முக தேர்வுகள் டிசம்பர் 7ம் தேதியும் மாற்றப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி