26 வருடங்களில் ஒரே நாள் தான் விடுமுறை எடுத்த நபர் அந்த விடுமுறை எதுன்னு தெரியுமா?
நம் பள்ளிகளில் படிக்கும் பொழுது சனி ஞாயிறு எப்பொழுது வரும் என்பதை பற்றியும் மற்ற அரசு விடுமுறை நாட்கள் எப்பொழுது வரும் என்பதை பற்றியும் சிந்தித்துக் கொண்டு செயல்பட்டு வருவோம் ஏனென்றால் விடுமுறை வந்தால் சந்தோஷத்தை அளிக்கும் என்பதால் விடுமுறை நாட்களை எண்ணி வருவோம் அதேபோலதான் கல்லூரி வாழ்வில்
மேலும் அரசு வேலையில் இருப்பவர்களும் மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுது சனி ஞாயிறு விடுமுறை மற்றும் பல்வேறு அரசு விடுமுறைகளை எதிர்பார்த்து இருக்கும் பொழுதும் தனக்கான தனிப்பட்ட விடுமுறை எடுப்பதற்கும் மனதில் எண்ணிக் கொண்டே இருப்பார்கள் இப்படி பள்ளி பருவம் முதல் வேலை பார்க்கும் நிறுவனங்கள் வரை அனைவரும் விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டு இருந்து கொண்டு இருந்துள்ளோம்
ஆனால் நம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் 26 வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விடுமுறை எடுக்காமல் ஒரே ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்துள்ளார்
நம்முடைய அண்டை மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பேஜ் பால் சிங் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் .மேலும் 26 வருடங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்த அவர் ஒரே ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்ததாகவும் மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுக்காமல் இருந்ததுனால் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வந்துள்ளன
மேலும் 26 வருடங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் பண்டிகை காலங்கள் அலுவலக விடுமுறையின் போதும் பணியில் தினசரி வந்து விடுவதை இவரது வழக்கமாக இருந்த நிலையில் 25 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் ஒரே ஒரு நாள் மட்டும் இவர் விடுமுறை எடுத்ததாக தெரிவித்துள்ளார் .மேலும் அந்த விடுமுறையானது 23ஆம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்ததாக தெரிவித்துள்ளார் அதேபோல் அந்த தனியார் நிறுவனம் சார்பில் ஒரு வருடத்திற்கு 45 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது அந்த விடுமுறையும் எடுக்காமல் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
அதேபோல் அவர் வேலை பார்த்த நாட்களில் ஒரு நாள் கூட தாமதமாக வந்தது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி