Type Here to Get Search Results !

வங்கி ஏடிஎம் களில் இலவசமாக 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் - புதிய அறிப்பு

 வங்கி ஏடிஎம் களில் இலவசமாக 5 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் - புதிய அறிப்பு



வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பொருளாதார சேமிப்பை வலுப்படுத்தும் வகையில் வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவங்கிட வழிவகை செய்யப்பட்டு வருகிறது . மேலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் பனவர்த்தனை செய்வதற்கு பல்வேறு வகையான இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. வங்கிகளில் வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு செல்லாமாலும் ,  விடுமுறை நாட்களில் பணம் எடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் ATM மையம் அமைக்கப்பட்டு பணவர்த்தனை செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.


இந்த ஏடிஎம் களில் பணம் எடுப்பது இலவசமாக இருந்த நிலையில் தற்பொழுது புதிய கட்டுபாடை அறிவித்து உள்ளது . அதன் அடிப்படையில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி தங்களுக்கு கணக்கு உள்ள ஏடிஎம்மில் ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டும் இலவசமாகப் பணம் எடுக்கலாம் என்றும் மற்ற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகர வாடிக்கையாளர்கள் 3 முறையும், பிற பகுதியில் வாடிக்கையாளர்கள் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம் என்றும் அதற்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு ரூ 21 கட்டணம் வசூலிக்கப்படும் என தற்பொழுது  ஆர்பிஐ சார்பில் புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டு உள்ளது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.