Type Here to Get Search Results !

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடத்திட நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடத்திட நிதி ஒதுக்கீடு


மத்திய மாநில அரசு சார்பில் மாணவர்களின் நலனுக்காக  பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது படிப்பில் மட்டும் இல்லாமல் விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு செயல் திட்டங்களை வெளியிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுஅரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இது குறித்துபள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி வெளியிட்டு உள்ள அறிக்கையில்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ,,தனியார் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விளையாட்டுத்துறையில் மேம்படுத்தும் வகையில் குறுவட்டம் ,கல்வி மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்திட பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுமதி அளித்தும் இதற்காக ரூபாய் 12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.