Type Here to Get Search Results !

கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை

கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை - தமிழக அரசு 


 தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மதிய உணவு ,இலவச ஆடை, இலவச சைக்கிள்,என எண்ணற்ற நலத் திட்டங்களை பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில்  செயல்படுத்தப்படுகிறது .மேலும் கடந்த இரண்டு வருடங்களாக  கோவிட் தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மேலும் தற்பொழுது கோவிட் தொற்று குறைந்த நிலையில் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் இருப்பதற்காக உடனடியாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன .மேலும் அடிப்படை கல்வி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இல்லந்தோறும் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி தன்னார்வலர்கள் மூலம் பள்ளி மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று தினமும் மாலை நேரங்களில் இலவசமாக பாடங்கள்  எடுத்து பள்ளி மாணவர்களின் கல்வி அறிவை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

 அரசு பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்கள் பல்வேறு சலுகைகள் பெற்று வருகின்றனர் மேல் படிப்புகளில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள படிப்புகளுக்கு  முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி கல்லூரியில் சேருவதற்காக பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது .

 தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே இடையில் ஏராளமானவர்கள் நின்றுவிடுகிறார்கள். ஆரம்பப்பள்ளி வகுப்பு முதல் கல்லூரி வகுப்பு வரை பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசு சார்பில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களை இடையில் நிற்பதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அதன் அடிப்படையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் படிப்பு படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்பட்டது அதனடிப்படையில் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி அன்று ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்புக்காக அரசு கல்லூரிகளில் சேரும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் இதனால் மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதால்  மாணவர்கள் மத்தியில் அனைவருக்கும்  மகிழ்ச்சியினை  ஏற்படுத்தி வருகிறது

ஜூலை 15ஆம் தேதி அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின்  பிறந்தாள்  அன்றைய தினம் வருவதால் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாக உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.