Type Here to Get Search Results !

வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

 வீரபாண்டி கௌமாரி அம்மன் திருக்கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு


தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் அருள்மிகு கெளமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் உலகில்  மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும். மேலும் இந்த திருக்கோவிலில் சித்திரை மாதங்களில் சித்திரை பெருந்திருவிழாவாக நடத்துவது வழக்கம். ஏழு நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை திருவிழாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சித்திரை திருவிழா தொடங்கியது இந்த சித்திரை திருவிழாவில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம் .மேலும் இரவு நேரங்களில் பக்தர்கள் அதிக அளவு வருவது வழக்கம். இந்த சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் வருவதால் பக்தர்களுக்கு பொழுதுபோக்கு இராட்சச இராட்டனங்களும், விளையாட்டு அரங்குகளும்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாளான திருத்தேர் வடம் இழுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது .அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன்  இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இந்த நிகழ்வின்போது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,சுகாதாரத் துறை அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் இந்துசமய அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் காவல் துறை சார்பில் பக்தர்களின் பாதுகாப்பு வலியுறுத்தும் விதமாக  பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.