தேனி அல்லி நகரத்தின் ஊர்காக்கும் வெங்கலா முனிஸ்வரன் திருக்கோவில் வரலாறும் - வைகைசாசி திருவிழாவும்
பல்வேறு மூலஸ்தானங்கள்
தேனி அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வெங்கலா முனீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது .இந்தத் திருக்கோயிலானது சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவான திருக்கோவில் ஆகும் .இந்த திருக்கோவில் வளாகத்தில் காமாட்சி அம்மன் ,கருப்பசாமி ,நாகம்மாள் ,முருகன் ,விநாயகர் என எண்ணற்ற மூலவர்கள் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்து வருகின்றனர்
மேலும் இந்த திருக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பெருந்திருவிழா நடத்துவது வழக்கம் அதேபோல் இந்த வருடமும் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்றுது.
அல்லிநகரத்தின் காக்கும் கடவுள்
தேனி உருவான தினத்தின் முதலே அல்லிநகரம் என்ற கிராமம் உருவாகி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து மக்கள் தொகையும் வளர்ச்சி அடைந்தது. அல்லி நகரத்தின் மேற்கே அல்லி நகர மக்களின் காக்கும் கடவுளாக வீரப்ப அய்யனார் கோவில் அமைந்து மக்களுக்கு அருள் புரிந்து வருகிறார்
அதேபோல் கிழக்குப் பகுதியில் உள்ள அல்லிநகரம் மக்களை காக்கும் கடவுளாக அருள்மிகு வெங்கலா முனீஸ்வரர் அமர்ந்து மக்களைப் பாதுகாத்து அருள்புரிந்து வருகிறார். இந்தத் திருக்கோவிலில் வைகாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறும்.
வைகாசி பெருந்திருவிழா
நிகழ்ச்சிகள் :
முதல் நிகழ்ச்சியாக வைகாசி மாதம் 18ஆம் நாள் 1 -6 -2022 புதன்கிழமை அன்று காலை ஏழு முப்பத்தி ஐந்து மணிக்கு மேல் எட்டு முப்பது மணிக்குள் இந்த திருக்கோவிலின் கொடியேற்றம் மிகச் சிறப்புடன் நடைபெற்றது
இந்த திருவிழாவின் தொடக்கமாக வைகாசி மாதம் 24ஆம் நாள் 7 - 6 -2002 செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த திருவிழாவில் முதல் நாளில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது பொங்கலும், பின்பு அல்லிநகரம் பெருமாள் கோவிலில் இருந்து கரகம் எடுத்துவரும் நிகழ்வும் நடைபெற்றது
இரண்டாவது நாள்
இரண்டாவது நாளில் ஊர் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் அன்னதானமும் தொடர்ச்சியாக நடைபெற்றது
மூன்றாவது நாள் நிகழ்ச்சியாக அம்மன் கரகம் எடுத்து பல நாட்கள் விரதமிருந்து வைக்கப்பட்ட முளைப்பாரியினை கொட்டக்குடி முல்லைப் பெரியாறு ஆற்றில் கலக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகள்
இந்தக் கோவில் திருவிழா ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் ராஜேஷ் ,இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குமார் ,கர்ணன், பாரத் ,செல்வேந்திரன், முனீஸ்வரன், பாண்டி, மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். மேலும் இந்த திருக்கோவிலில் வைகாசி திருவிழாவில் சிறப்பு விருந்தினராக சிவசேனா கட்சியின் மாநில நிர்வாகி குருஐயப்பன் மற்றும் சிவசேனா கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர் .தன்னார்வலர்கள் , அரசியல் பிரமுகர்கள் , அரசுத்துறை அலுவலர்கள் என பல்வேறு துறையினை சேர்ந்தவர்களும் ஏராள மனோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த திருக்கோயிலுக்கு வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு ஸ்ரீ வெங்கலா முனீஸ்வரர் , ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ கருப்பசாமி , ஸ்ரீ நாகம்மாள் அருள் பெற்றுச் சென்றனர்.
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி