Type Here to Get Search Results !

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியாளர்

தேனி அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியாளர்


 பசுமை சாம்பியன் விருது

தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல்வேறு செயல்பாடுகளை செய்து முழு ஈடுபாடுடன் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் தன்னார்வலர்கள் என 100 நபர்களுக்கு ஆண்டுதோறும் பசுவை சாம்பியன் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது 


அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் சுற்றுசுழல் பாதுகாப்பில்  பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் இருவருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது .மேலும் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.


இந்த விருதுக்கான தேர்வு தமிழ்நாடு சுற்றுசழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தேனி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்திருந்தது. இந்த விண்ணப்பங்களை தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுவினர் பரிசோதனை செய்து பசுமை சாம்பியன்  விருதுக்கு தகுதியான நபர்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு முழு ஈடுபாடுடன் ஈடுபட்ட இரண்டு நபர்களை பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்

தேனி மாவட்டத்தில் விருது

தேனி மாவட்டம் உத்த



மபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்ற தன்னார்வலர் தேனி மாவட்டத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகளில் நீர் ஆதாரம் தொடர்ந்து நிலைத்திட  பனை விதைகள் நடவு செய்தார் .

முதலில் உத்தமபாளையம் பகுதியில் தொடர்ந்த  இந்த பனை விதை நடும் பணியில் ஈடுபட்ட செந்தில்குமார் தேனி மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகளில் நீர் வளம் பெருகுவதற்காக   பனை விதை நடும் நிகழ்ச்சி பனை விதை நடும் திருவிழா என்ற மிகப் பெரிய  நடத்தி மிகவும் சிறப்பான முறையில் செயல்பாடுகளை செய்திருந்தார்.

 ஆணி பிடுங்கும் திருவிழா 

அசோகர் காலத்தில் பொதுமக்கள் சாலை ஓரங்களில் நடப்பதற்கு நிழலுக்காகவும் மழை பொழிந்து பூமி செழிப்பாக வளர மரங்களை சாலை ஓரங்களில் இருபுறமும் நடவு செய்து மிகச் சிறப்பான முறையில் ஈடுபட்டார்.


அரசு சார்பிலும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் .இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தன்னார்வலர்கள் ஆங்காங்கே மரங்களை நடவு செய்தும் அரசு சார்பிலும் பல்வேறு மரங்களை நடவு செய்து வருகின்றனர் . இந்த மரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் விதமாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகத்தினர் மரங்களில் ஆணி அடித்து தங்களுடைய நிறுவனங்களில் விளம்பரங்களை வெளிப்படுத்தும் விதமாக ஈடுபட்டுவருகின்றனர் .இதனால் மரங்களின் வளர்ச்சி மற்றும் ஆயுள் காலம் குறைகிறது. இதனை கருத்தில் கொண்டு செந்தில்குமார் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து தேனி உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடிங்கும் நிகழ்ச்சியை முதலில் சிறிதளவு செயல்பட்டனர் .பின்பு அந்த நிகழ்ச்சியை ஆணி பிடுங்கும் திருவிழாவாக நடத்தி ஆயிரக்கணக்கான மரங்களை பிடுங்கி மரங்களின் வளர்ச்சியை உறுதி செய்து வருகின்றனர்


 பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவம் 

பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசடைந்து மண்வளம் குறைந்து வருகிறது இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக முன்னோர்கள் பயன்படுத்திய துணிப்பையை  மீண்டும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது .இதேபோல் செந்தில் மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க விதமாகவும் மண் வளத்தை காக்கும் முயற்சியில் தேனி கம்பம் குமுளி கூடலூர் பெரியகுளம் ஆண்டிபட்டி உட்பட பல்வேறு நகரங்களிலும் ,கிராமங்களிலும் மஞ்சள் பை வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் பங்குனி சித்திரை வைகாசி ஆகிய மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு முக்கியமாக திருவிழாக்கள் நடத்துவது வழக்கம் இந்த திருவிழாவில் பிளாஸ்டிக் பைகள் அதிகளவில் பயன்படுத்தி  வருவதால் மண் வளம்  குறைய வாய்ப்புள்ளது .


இதனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டத்தில் 7 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோயிலில்  இலட்சக்கணக்கான பக்தர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றில் பகுதிகளிலும் கண்ணீஸ்வரர்  கோவில் த பகுதிகளிலும் ,கௌமாரியம்மன் கோவில்  பகுதிகளிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர் அதேபோல் முல்லைப் பெரியாறு ஆற்றில் நீராடி சென்றனர் இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர் இதனை கருத்தில் கொண்டு இந்த திருவிழா முடிந்தவுடன் செந்தில்குமார் தலைமையிலான தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு முல்லைப்பெரியாறு அணை பகுதிகளிலும் கண்ணீஸ்வரர் கோவில் பகுதிகளிலும் வீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோயில் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர் .

மேலும் பல்வேறுபணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என்ற அடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் செந்தில்குமார் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது நிகழ்வுக்கு விண்ணப்பம் அளித்துள்ளார் .மேலும் மிக சிறப்பான முறையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட செந்தில்குமாருக்கு பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் கம்பம்  அருகே உள்ள ஆதி சுஞ்சனகிரி கல்லூரி சார்பில் இயற்கை வளம் பெருகுவதற்கு கல்லூரி வளாகத்திலும் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், பல்வேறு மரக்கன்று நடும் நிகழ்வு ஏற்படுத்தியும்,சுற்றுச்சூழலை பாதிக்கும்  பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்துள்ளனர் .இதனடிப்படையில் ஆதி சுஞ்சனகிரி கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது



 இந்த விருதானது சுற்றுச்சூழல் தினமான ஞாயிற்றுக்கிழமை (5-6-2022)  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேனகா மில்ஸ் தொழிற்சாலையில் நடைபெற்றது மேனகா மில்ஸ் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் கலந்துகொண்டு பசுமை சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட உத்தமபாளையம் செந்தில்குமார், கம்பம் ஆதி சுஞ்சனகிரி கல்லூரி இயக்குனருக்கும் பசுமை சாம்பியன் விருது மற்றும் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கி சிறப்பித்தார் 

மேலும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியாளர் மஞ்சள் பைகளை வழங்கும் திட்டத்தினை மேனகா மில்ஸ் தொழிற்சாலை இயக்குனர் மணிவண்ணன் வழங்கி சிறப்பித்தார் .பின்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள்  அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது இதேபோல் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியினை  தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார் மேலும் பசுமை சாம்பியன் விருதினைப் பெற்ற இருவரையும் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்புரையாற்றினார் மேலும் பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும் என்றும் பசுமையான பூமி வளர்வதற்கு மரங்களை நடவு செய்ய வேண்டும் என்றும் கூறினார் 

மேனகா மில்ஸ் இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது


 மேனகா மில்ஸ் தொழிற்சாலை  பல்வேறு மிகப்பிரபலமான எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் தொடர்பு கொண்டு உள்ளது என்றும், தற்போது மில் வளாகத்தில் மண் வளத்தை பாதுகாக்கும் வகையில் பசுமையான மரங்களை நடவு செய்து பசுமை சூழல் போன்று  காணப்படுகின்றது என்றும்,


தொழிற்சாலைகளில் நூலில் பயன்படுத்தப்படும் கோண்களை  விரைவில் மாற்றம் செய்து பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்டு மாற்று வழிகளில் பயன்படுத்த முயற்சி  செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பசுமை சாம்பியன் விருது பெற்ற இருவரையும் வாழ்த்தி பேசினார் 

பசுமை சாம்பியன் விருது பெற்ற செந்தில்குமார் பேசும்பொழுது தங்களது பகுதிகளில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட  தன்னார்வ குழுவானது தற்போது தேனி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு பல்வேறு குளம் குட்டைகளில் பனை விதை நடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்களை நடவு செய்து வருகிறோம் என்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் மரங்கள் செழித்து வளர வேண்டும் என்பதற்காக ஆணி பிடுங்கும் திருவிழா நடத்தி வருகிறோம் என்றும் இந்த விருது தற்பொழுது எனக்கு வழங்கியது போல் பல்வேறு இளைஞர்கள் இந்த விருதினைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தி பேசினார்.







மேலும்  இந்த பசுமை சாம்பியன் விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார்


மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் மேனகா மில்ஸ் நிர்வாக அலுவலர்கள் ,தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள்  என ஏராளமானோர் கலந்துகொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.