Type Here to Get Search Results !

11 தங்கம் , 6 வெள்ளி பதக்கங்களை குவித்த தேனி சிலம்பாட்ட வீரர்களுக்கு வரவேற்பு அளித்த கிராம மக்கள்

 11 தங்கம் , 6 வெள்ளி பதக்கங்களை குவித்த தேனி சிலம்பாட்ட வீரர்களுக்கு வரவேற்பு அளித்த கிராம மக்கள் 


தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளை 

கோவாவில் கடந்த சில நாட்களுக்கு  முன்பாக தேசிய அளவில் சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஹரியானா ,தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் ,கேரளா ,மத்திய பிரதேசம், பஞ்சப், மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


 600 அணிகள் பங்கேற்பு

இதேபோல் தமிழகத்திலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை சார்பில் 17 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தமிழகத்துக்கும் தேனி மாவட்டத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில்  தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை மாணவ மாணவிகள் 11 தங்கப் பதக்கங்களையும் ஆறு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று வெற்றி வாகை சூடினார்கள்


 மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராமத்தினர் 

இந்நிலையில்  கோவாவில் வெற்றி பெற்று தனது சொந்த மாவட்டத்திற்கு திரும்பிய மாணவ மாணவிகளை தேனி மாவட்ட தலைநகரமான  தேனியிலும், மாணவ மாணவிகளின் வெற்றி பெற்று பெருமை சேர்த்த தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளையின் இருப்பிடமாக திகழும் அரண்மனைப்புதூர் கிராமத்திலும் ,


சிலம்ப மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கிராமத்து பொதுமக்கள் என ஏராளமான வருகை புரிந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் மேலும் தமிழகத்திற்கு  மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கே சென்று வெற்றி வாகை சூடிய மாணவ மாணவியர்களை கல்வியாளர்களும் ,



சமூக ஆர்வலர்களும், முக்கிய பிரமுகர்கள் ,அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.