ஆண்டிபட்டி அருகே அம்மாச்சியாரத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய கல்லூரி மாணவிகள்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாய கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயங்கள் பற்றியும் விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து செயல்முறைகளை பற்றியும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்று செய்முறை மூலம் விளக்கப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதே போல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் அம்மாச்சியாபுரம் பகுதியில் உள்ள நெல் பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் நான்காம் ஆண்டு மாணவிகள் சார்பில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் நெல் பயிரில் குறைந்த செலவில் அதிக விளைச்சல் எவ்வாறு பெற வேண்டும் என்றும் என்பதனை குறித்தும் நெல் பயிர்களிடையே ஊடுபயிர்கள் விளைவித்து அதிக லாபம் எவ்வாறு எடுப்பதும் என்பது குறித்தும் அம்மாச்சியா புரம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக சென்று செய்முறை மூலம் விளக்க பயிற்சி அளித்தனர் .
இதேபோல் வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் உதவி வேளாண்மை அலுவலர் அப்புசாமி ஆட்மா வட்டார அலுவலர் வனிதா ஆகியோர் நெல் பயிர்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தெளிக்கும் பொழுது அதிக வேலைப்பாடுகளும் அதிக விளையும் உள்ளது என்றும் அதனைக் குறைக்கும் வகையில் திரவப் பொருள் மூலம் எவ்வாறு உரம் தெளிக்க வேண்டும் என்பது குறித்தும் அம்மாச்சியாபுரம் பகுதி நெல் விவசாயிகளுக்கு செயல்முறை மூலம் விளக்க உரையாற்றினார்கள்.
மேலும் இந்த நிகழ்வின்போது வேளாண்மை துறை அலுவலர்கள் வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகள் பங்கு பெற்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி