பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி
மாதந்தோறும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவத் தொகை வழங்குவதற்கான புதிய திட்டத்தினை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் .அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனறிவு தேர்வு என்ற தேர்வு நடத்தப்பட்டு தேர்வாகும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஆயிரம் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும்அறிவித்த நிலையில் தேர்வாகும் ஆயிரம் மாணவர்களுக்கு ஐடிஐ போன்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பல்வேறு வழி கட்டி கல்வியையும் கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் முதலமைச்சரின் திறனறி தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு , பட்டபடிப்பு, முதுகலை படிப்பில் சேரும்பொழுது வருடம் ரூபாய் 12000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி