வீட்டின் அலமாரி அருகில் எந்தெந்த பொருட்கள் வைத்த பணம் வரவு அதிகரிக்ககூடும்
நமது முன்னோர்கள் முதல் இப்ப உள்ள காலகட்டங்களில் வாழும் மனிதர்கள் வரை கடின உழைப்புகளை உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முன்னொரு காலத்தில் வேலைகளுக்கு தட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தன. பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குவதும் பொருட்களை விற்பதுமாக இருந்தது .ஆனால் இப்பொழுது மனிதனின் அடிப்படைத் தேவையாக விளங்கி வருவது பண தேவை மட்டும் தான். இந்த பணத்தை நாம் இரவும் பகலமாக உழைத்தும் வீட்டில் வைக்கும் பொழுது தினசரி செலவாகிக் கொண்டே இருந்து வருகிறது. இவை எதற்காக என்பது பற்றி நம் அறிந்து செயல்பட வேண்டும்.
ஒரு சில பொருட்களை இடத்தை மாற்றுவதன் மூலமும் நம்முடைய உழைப்புக்கு தகுந்தாற்போல் பணம் வீட்டில் இருந்து கொண்டு இருக்கும். அப்படி மாறி செய்து விட்டால் பணம் செலவாகி கொண்டே இருக்கும். பணம் வைக்கும் அலமாரியில் லட்சுமி படம் வைத்திருக்க வேண்டும் லட்சுமி படம் வைத்திருக்கும் பொழுது நம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வரும்பொழுது லட்சுமி படத்தில் அருகில் வைத்துக் கொண்டால் அதிக செலவு செய்வது நின்றுவிடும். மேலும் லட்சுமி படம் இருக்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் .சிவப்பு பகுதிகள் மட்டுமே இருந்தால் நமக்கு பண வரவு வரும் .இல்லை என்றால் கருப்பு போன்ற நிறங்களில் வைத்தால் பணம் வரவு குறைந்து விட்டு செலவு அதிகமாக கூடும் .ஆதலால் லட்சுமி படம் வைக்கும் இடத்தில் கருப்பு என்ற பொருட்கள் இல்லாமல் சிவப்பு போன்ற நிறங்களில் உள்ள பொருட்களை வைத்தால் மட்டுமே நமக்கு பணம் வரும் . மேலும் நாம் எப்பொழுதும் பணம் சேமித்து வைக்கும் பொழுது அலமாரியில் வைத்து விடுவோம் அலமாரியில் சுவாமி படங்களும் இருக்கும் இதனால் இந்த அலமாரியின் அருகில் தொடப்பக்கட்டை போன்றவற்றை வைப்பதை தவிர்க்க வேண்டும் .இந்த தொடப்பக்கட்டையை வைப்பதனால் லட்சுமிக்கு ஆப சகுனமாக விளங்கி பணம் வரவு நின்று விட்டு செலவு அதிகரிக்கக்கூடும். நம் இரவு பகலும் உழைத்தால் கூட ஒரு சிலருக்கு பணம் இருப்பு இருக்கவே இருக்காது .ஆனால் ஒரு சிலர் குறைந்த பணம் சம்பாதித்தாலும் கூட அவர்களுக்கு செலவு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் வரவு மட்டும் வந்து கொண்டே இருக்கும். மேலும் முதலுதவி பெட்டி, மருந்து பொருட்கள் ஆகியவற்றை நாம் சமையல் அறை பகுதியில் வைத்திருப்பதை பார்த்திருக்கலாம். ஆனால் சமையல் அறைப்பகுதியில் முதல் உதவி மருந்து பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் .இப்படி வைப்பதனால் பணம் வரவு குறைய தொடங்கும் .மேலும் நம் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் செலவாகி கொண்டே இருக்கும். பண வரவும் இருக்காது.
இவற்றுக்கெல்லாம் முதலில் நாம் முன்னோர்கள் வீட்டுக்கு வெளியே தான் குளியலறை ,பாத்ரூம் ஆகியவற்றை கட்டி வைப்பார்கள் ஆனால் தற்பொழுது உள்ள காலப்போக்கில் குளியலறை கழிப்பறை ஆகியவற்றினை வீட்டுக்குள்ளேயே கட்டி வைத்து விடுகிறோம் .இதனால் நமக்கு பணவரவு குறைய தொடங்க வாய்ப்பு உள்ளது. இதனை போக்குவதற்கு எப்போதும் வீட்டுக்குள் உள்ள பாத்ரூம் மற்றும் கழிவறையில் பயன்படுத்தப்படும் கதவுகளை மூடி வைக்க வேண்டும். மூடி வைத்தால் மட்டுமே பணம் வரவு வரக்கூடும். இல்லை என்றால் செலவு அதிகரிக்கக்கூடும். நம் பண வைக்கும் அலமாரியில் நாம் எப்பொழுதும் பணம் தங்கம் போன்ற பொருட்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும் .இவற்றை தவிர்த்து வேற பொருட்களை வைப்பதினை தவிர்க்க வேண்டும். அதேபோல் பணம் வைக்கும் அலமாரியில் நாம் சம்பாதிக்கும் பணமானது செலவாகமால் இருக்க, அந்த அலமரியில் வாஸ்துபடி ஒரு சிறிய கண்ணாடியினை வைக்க வேண்டும்.
அந்த கண்ணாடியது பணம் நகை தெரியும்படி வைத்திருக்க வேண்டும். இப்படி வைப்பதனால் பணம் அதிகரிக்க கூடும் .மேலும் பண வரவு அதிகமாக வர வேண்டும் என்ன எண்ணத்தில் இருக்கும் அனைவரும் உடனடியாக குபேரன் சிலையை வீட்டில் வைத்தால் பணவரவு கூடும் என்று கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி