நீண்ட கால மரங்கள் பயிரிடும் போது எவ்வளவு இடைவெளி வேண்டும்
நாம் வாழும் இடங்களில் சுமார் பத்து மீட்டர் 15 மீட்டர் என்ற அளவில் பல்வேறு மரங்கள் உள்ளன. மேலும் அதே இடத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக 50 அடி முதல் 100 அடி வரை உள்ள மரங்கள் அதிக அளவு இருந்துள்ளன. மேலும் இந்த இடங்களினால் மழைப்பொழிவு அதிகம் இருந்து தண்ணீர் தட்டுப்பாடும் எவ்வித தட்டுப்பாடும் இல்லாமல் இருந்து வந்தது விவசாயம் செழித்து பஞ்சம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்பொழுது இருபது அடிக்கு மேல் உள்ள மரங்களை பார்க்க வேண்டும் என்றால் மலை பிரதேசங்களில் மட்டுமே மரங்கள் உள்ளன. ஏனென்றால் அந்த மரங்கள் உள்ள பகுதியில் மனித இனம் அதிகளவு செல்லாமல் இருக்கிற காரணத்தினால் மட்டுமே மரங்கள் அதிக வளர்ச்சியடைந்து உயரமாகவும் கம்பீரமாகவும் உள்ளது .
ஆதனால் மழை பிரதாசங்களில் பல்வேறு நாட்களில் மழை பெய்வதற்கு சாதகமாக அமைகிறது ..பத்து குடும்பங்கள் வரை இருந்த இடங்கள் தற்பொழுது ஆயிரம் குடும்பங்களாக வாழ்கின்றன. நாகரிங்கள் வளர வளர மரங்களின் அழிவு அதிகரித்து வருகின்றன. மேலும் தற்பொழுது ஒரு சில பகுதிளில் மட்டும் ஒரு சிலர் மரங்களை நடவு செய்து வளர்த்து வருகின்றனர். இந்த மரங்களை எவ்வளவு இடத்தில் எத்தனை மரங்கள் நட வேண்டும் என்று எவ்வளவு இடைவெளி விட்டு மரங்களை நட்டால் நமக்கு பயன் தரும் என்பதை பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.. மேலும் ஒரு சில இடங்களில் பத்து மரம் மட்டுமே நடவு செய்யும் இடத்தில் 15 மரங்கள் நடவு செய்து இருப்பார்கள். அதே பகுதியில் பத்து மரங்கள் நடவு செய்ய வேண்டிய இடத்தில் பத்து மரம் மட்டுமே நடவு செய்து சரியான முறையில் பராமரிப்பு செய்து வருவார்கள் .இந்த இரண்டு இடங்களிலும் தண்ணீர் உட்பட பல்வேறு பராமரிப்புகள் ஒரே அளவு செய்து வந்தாலும் பத்து மரங்கள் நடவு செய்த இடத்தில் உள்ள மரங்கள் சரியான முறையில் வளர்ச்சி அடைந்து நல்ல பலனை தரும் ஆனால் 15 மரங்கள் நடவு செய்த இடத்தில் மரங்கள் வளர்ச்சியாகாமல் குருகிக் கொண்டே இருக்கும் .இதனால் மரங்கள் நடும் பொழுது சரியான முறையில் இடைவெளியை விட்டு நடவு செய்தால் குறைந்த காலத்தில் மரங்கள் நல்ல பலனை தரும். அதேபோல் மழை பொழிவும் அதிகமாக இருக்கும்
குறைந்த இடைவெளி என்று பார்த்தால் கற்றாழை மரம் மட்டுமே அதாவது 1.5 X 2
பப்பாளி 7x7 வாழைமரம் 8 x8 மாதுளை மரம் 9 X9 திராட்சை 9 X 6 முருங்கை மரம் 12 X 12 பனைமரம்10x10 தேக்கு மரம் 10x10 மலைவேம்பு 10 X 10 தென்னை மரம் 24X 24 மாமரம் பெரியது 30 X 30 மாமரம் சிறியது 15 x 15 பலாமரம் 22 X 22 சப்போட்டா மரம் 24 X 24 எலுமிச்சை14 X 14 முந்திரி 14 X 14 கருவேப்பிலை 7 x 8 கோகோ 24 x 24 வேப்பமரம் 15 X 15
என்ற அளவுகளில் சரியான முறையில் சரியான இடவெளி விட்டு மரங்களை நடவு செய்தால் மரங்களும் நன்றாக வளர்ச்சி அடைந்து நல்ல பலனைத் தரும் நல்ல மழையையும் மரங்கள் நமக்கு கொடுக்கும்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி