பணம் வாங்கி இருந்தாலும் மகளிரின் உரிமை தொகை திட்டத்தில் ஒவ்வொரு மதமும் ஆய்வு செய்யப்படும் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது பல்வேறு தகுதியின் அடிப்படையில் பெண்களுக்கு ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது .இந்நிலை யில் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை தவிர்க்கும் விதமாக தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் மாதந்தோறும் காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் கள ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது . மேலும் கள ஆய்வின்போது ஒவ்வொரு மாதமும் இறப்பு தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் தொடர்பான தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய தகவல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ,வருமான சான்று தொடர்பான தகவல்கள், கார் மற்றும் கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பற்றியும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் / ஆண்டுக்கு ஒரு முறை காலாண்டுக்கு ஒரு முறை அறை ஆண்டுக்கு ஒரு முறை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பல்வேறு வரிகளையும் ,பத்திரப்பதிவு தொடர்பான தகவல்களின் தகவல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அரையாண்டுக்கு ஒரு முறை தொழில் தொடங்கப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும் என்றும் வருமான வரி செலுத்தப்பட்ட மற்றும் தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் சொத்து வரி குறித்த தரவுகள் ஆண்டுதோறும் சரி பார்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகவல்களை பராமரிக்கும் அரசு துறைகள் தொழில்நுட்ப தொடர்பாக உரிய காலத்தில் தகவல் உள்ள தரவுகளை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் அளிக்க வேண்டும் என்றும் இந்த தகவல் அனைத்தும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் தானாக புதுப்பிக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்றும், தானாக புதுப்பிக்கப்படும் நிலையில் தகுதி நீக்கம் செய்யப்படும் பயனர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றும் ,இது குறித்து பயனர்கள் முறையீடு செய்ய விரும்பினால் இணையதள மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் ,சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நீக்கம் செய்ய வ படவேண்டிய பட்டியலினை இணையதளம் மூலமாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதிக்குள் சமூக பாதுகாப்பு திட்ட ஆணையாருக்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றும் முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் மகளிர் உரிமை தொகையைச் திட்டத்தில் வாங்கும் பெண்கள் மேற்கண்ட வழிமுறைகளுக்கு செயல்பாடுகளில் இருந்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் தானாக நீக்கி வைக்கப்படும் என்றும் இது குறித்து மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்குள் மே ல்முறையீடு செ ய்யலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி