துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
புதுச்சேரியில் காரைக்கால் மற்றும் மாகி பிராந்தியங்களில் 100 க்கும் மேற்பட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் காதியாக உள்ளன .இந்நிலையில் இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் .
புதுச்சேரியில் உள்ள இரண்டு பிராந்தியங்களிலும் மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் உள்ளது .இந்த காலைப்பணியிடங்களை நிரப்புவதற்காக
அக்-21 முதல் நவ-20ந் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
http://recruitment.py.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும் அந்த விண்ணப்ப படிவத்தை நிரப்பி விட்டு அதை பிரிண்ட் அவுட் செய்து கல்வி மற்றும் அடிப்படை தகுதிசான்றிதழ்களின் நகல்களை இணைத்து
இயக்குனர் பள்ளி கல்விதுறை
பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளாகம்
100 அடி ரோடு அண்ணாநகர் ,
புதுச்சேரி .60 5005
என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
மேலும் இந்த விண்ணப்ப படிவங்களை நவம்பர் 27ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் இந்த விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் அளிக்காத விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்ற விரும்பும் தகுதி உள்ள நபர்கள் உடனடியாக இந்த அறிவிப்பினை பார்த்து தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி