டிசம்பர் 4 ம் தேதி பொது விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறு பகுதியில் உள்ள புனித சவேரியார் பேரலாயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இந்த வருடமும் இந்த சவேரியார் பேரலாயத்தில் மிகச் சிறப்பான முறையில் திருவிழா நடத்துவதற்காக கடந்த 24 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்
டிசம்பர் 4 ஆம் தேதி அன்று காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி , காலை 11 மணிக்கு தேர்ப்பவனி என முக்கிய நிகழ்ச்சி நடக்க உள்ளது 'இதனால் கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளால் டிசம்பர் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 16ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி