Type Here to Get Search Results !

டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்

 டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் 


மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் பல்வேறு செயல்பாடுகளையும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகின்றன .இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புதிய செயல்பாடுகள் வருகின்றன .அவை என்ன என்ன என்பதனை இதில் காணலாம்

அடுக்குமாடி குடியிருப்பு பதிவில் புதிய முறை

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து புதிய நடைமுறைகள் வர உள்ளன.அந்த வகையில் அடுக்குமாடி குடியிருப்பில் ,அடிமனை (UDS )கட்டிடம்,ஆகியவற்றிற்கு  கூட்டு மதிப்பில் ஒரே பத்திரப்பதிவு முறை அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


.இந்த புதிய நடைமுறையினால் முத்திரைத் தீர்வை கனிசமாக  குறையும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு

சர்வதேச கச்சா எண்ணெய் விலை  நிலவரத்திற்கு ஏற்றது போல் சிலிண்டர்களின் விலையின் ஏற்றம் இறக்கம் இருக்கும் . மேலும்  வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் எரிவாயு மற்றும் வணிகம் சார்பில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் எரிவாயு விலையினை எண்ணெய்  நிறுவனங்கள் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில்  டிசம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் விலையும் மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  சில மாதங்களாக சிலிண்டர்களின் விலை  ஏற்றம் இல்லாத நேரத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் விலை ஏற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது இதைப்போல் கடந்த சில மாதங்களாக வீட்டு சிலிண்டரின் விலை எந்தவித மாற்றம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் வணிக சிலிண்டர் மட்டும் விலை ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்துள்ளது.

வங்கிகளில் பத்திரம் குறித்து அறிவிப்பு:

வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கடனை செலுத்திய பின் வாடிக்கையாளர்கள் சார்பில்  வைக்கப்படும் பத்திரங்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும்


,இவ்வாறு வழங்காமல் இருக்கும் நேரத்தில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் ரூபாய் 5000 கட்டணமாக தர வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய சிம் கார்டு குறித்து அறிவிப்பு

தொலை தொடர்புகள் துறைகளில் பாதுகாப்பு நலனைக்கருத்தில்  கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் புதிய சிம்காடுகள் வாங்குவது குறித்தும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறைகள் வர உள்ளன.


அதாவது ஒருவர் ஒரு சிம் கார்டு வாங்குவதற்காக செல்லும் பொழுது கேஒய்சி இல்லாமல் எந்த ஒரு சிம் கார்டு பெற முடியாது. அதேபோல் ஒரு நபர் குறிப்பிட்ட சிம் காம்கார்டு மட்டுமே வாங்க முடியும். அதிகமாக வாங்க முடியாது, என்ற திட்டமும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஜிமெயில்அக்கவுண்ட் முடிக்கம்

youtube இணையதளம் கூகுள் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு  பதிவு செயல்பாடுகளை செயல்படுத்த வேண்டுமானால் ஜிமெயில் அக்கவுண்ட் கண்டிப்பாக வேண்டும் மேலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல்ஜிமெயில் கணக்கு குறித்து புதிய அறிவிப்பும் வர உள்ளது


அதாவது டிசம்பர் 1ஆம் தேதி முதல் கடந்த சில வருடங்களாக செயல்படாத ஜிமெயில் கணக்கு அனைத்தும் முடக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆதார் குறித்து  அப்டேட் 

ஆதார் கார்டு வைத்துள்ள அனைவரும் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

செயல்படாத UPI ஐடி முடக்கப்படும்


Pay tm ,google Pay Phone Pay மற்றும் பேமன்ட் ஆப்புகள் ஆகியவை வைத்திருக்கும் அணைத்து  தொலைபேசிகளிலும்  கடந்த சில வருடங்களாக ஆப்புகள் பயன்படுத்தாமல் மற்றும்  செயல்படாமல் இருந்தால் அந்த கணக்குகளும் முடக்கப்படும் என்றும் அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.