மாணவர்களுக்கு ரூ 5000 விண்ணப்பிக்க கடைசி தேதி டிச-3 தேதி
மத்திய மாநில அரசின் கல்வி துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு நலத் திட்டங்களை செய்ய படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு தேர்வுகள் மூலம் பள்ளி மாணவர்களின்வளர்ச்சியை ஊக்கி வைக்கும் வகையில் தேர்வுகள் வைக்கப்பட்டு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இது போல் தமிழக கல்வித்துறை சார்பில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேசிய கணித தேர்வு நடைபெற உள்ளது.
மாணவர்களின் கணித திறமையை போற்றும் வகையில் கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் வருடந்தோறும் நடத்தப்படும் இந்த தேர்வானது இந்த வருடத்திற்கு டிசம்பர் 3 ந் தேதி காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது .
மேலும் இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வருகின்ற 22 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதேபோல் கணித திறமை தேர்வு நடைபெறும் நாளில் காலை 10-15 மணிக்குள் வர வேண்டும் என்றும்
,மேலும் இது குறித்து சந்தேகம் மற்றும் முன்பதிவு செய்ய 044-2441 0025 என்ற தொலைபேசிஎன்னில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ஒருவருக்கு ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக இருவருக்கு ரூபாய் 2000,மூன்றாம் இடத்துக்கு வரும் மூன்று நபர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரூபாயும், 4வது பரிசாக 20 நபர்களுக்கு ரூ 500 வழங்கப்படும் என மையத்தின் இயக்குனர் லெனின் தமிழ் தமிழ்கோவன் தெரிவித்துள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி