Type Here to Get Search Results !

நிலங்களை அளவீடு செய்ய இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

நிலங்களை அளவீடு செய்ய  இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என  தமிழக அரசு அறிவித்துள்ளது


மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
இதேபோல் வருவாய்த்துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. நில அளவை பிரிவு சார்பிலும் பொதுமக்கள் பல்வேறு செயல்படுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக நில உரிமையாளர் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோரை சந்தித்து மனு வழங்காமல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்து இணையம் மூலம் நிலங்களை அளவீடு செய்யும் திட்டத்தின்  விழாவினை தொடங்கி வைத்தார் .இந்தத் திட்டத்தின் மூலம் நிலம் வைத்திருக்கும் நபர்கள் நிலத்தை அளவீடு செய்ய வங்கிகளுக்கு சென்று பணம் கட்டாமலும் அதே போல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் அளிக்காமால்  இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது . இதனால் பொது மக்களின் அலைச்சல்  குறைகிறது
நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை அளப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் அளிக்காமல் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து கீழ்க்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் முகவரிக்கு சென்றுவிண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பம் அளிக்கும் நபருக்கு எந்த தேதியில் நில அளவீடு செய்யப்படும் என்று அவருடைய தொலைபேசி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும்,

அதனை தொடர்ந்து நில அளவீடு செய்ய விண்ணப்பித்து நிலங்களை அளவீடு செய்தபின்   https://eservices.tn.gov.in/ என்ற இணையதளமுகவரிக்கு சென்று தங்களுடைய நிலங்கள் அளவீடு செய்யப்பட்ட நகலை  பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகஅரசு  சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.