Type Here to Get Search Results !

மத்திய அரசு சார்பில் UMANG APP ஆப் மூலம் 15 ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கான வழிமுறைகள்

மத்திய அரசு சார்பில் UMANG APP ஆப் மூலம் 15 ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கான வழிமுறைகள்



மத்திய அரசு சார்பில் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெரும்வகையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பாக உமாங் ஆப் என்ற மொபைல் செயலினை அறிமுகப்படுத்தியது .டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட இந்த செயலி மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் பயன்படுத்தப்படும் இந்த செயலி மூலம்  ஆதார், டிஜி லாக்கர் பாரத் பில் மேமன்ட் சிஸ்டம் ,அதாவது தண்ணீர் தொலைபேசி டிடி ஹெச் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களையும் இதன் மூலம் கட்டலாம்.இந்த செயலை மூலம்  சி பி எஸ் சி மாணவர்கள் தேர்வு மையங்கள் ,தேர்வு முடிவுகள் ஆகியவற்றை பார்ப்பதும் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஜிஎஸ்டி சம்பந்தமான தகவலையும் பிஎஃப் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த தகவலையும் இந்த செயலி மூலம் பயன்படுத்தி பயன்பெறலாம்.

இவ்வளவு பயன்பாடு உள்ள இந்த செயலியை பொதுமக்களியே கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக இந்த செயலி எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றியும் ,பயன்படுத்துவதனால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பதை பற்றியும் உருவாக்கும் நபர்களுக்கு பரிசு தொகையை வழங்கும் திட்டத்தை  மத்திய அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது



உமாங் ஆப் செயலி உருவாக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததினை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பரிசுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உமாங் ஆப் நன்மைகள் ,டிஜிட்டல் இந்தியா ,உங்கள் உங்கள் வாழ்க்கையில் உமாங் ஆப் செய்த மாற்றங்கள் உமாங் ஆப் சூப்பரா போகுது என்று எதற்கு சொல்ல முடியுமா போன்ற தலைப்புகளில் உருவாக்க வேண்டும்


உமாங் ஆப்பை பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வுகளை செயல்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக ரீல்ஸ் போட்டிகளில் பங்கேற்று  பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரீல்ஸ் போட்டியில் முதலிடம் பிடிக்கும் நபர்களுக்கு ரூபாய் 15,000, இரண்டாம்  இடம் பிடிக்கும் நபர்களுக்கு12,000 ,மூன்றாம் இடம் பிடிக்கும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய், அடுத்த ஏழு நபர்களுக்கு ரூபாய் 2000 ரூபாய் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோக்கள் 9 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்

இந்தப் போட்டிகளை விண்ணப்பிக்க கடைசி தேதி டிச- 8


உமாங் செயலி மூலம் போஸ்டர் வெளியீடு செய்தாலும்  பரிசுகள் வழங்கப்படுகிறது இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசு 7500, இரண்டாம் பரிசு ரூ 5000, மூன்றாம் பரிசு 3500 ரூபாயும் அடுத்த 7 நபருக்கு ரூ 1500 ம் வழங்கப்படுகிறது.

உமாங் செயலி சார்பாக சிலோகம் எழுதும் போட்டியும் நடைபெறுகிறம் இதில் வெற்றி பெற்றலும்   பரிசுகள் வழங்கப்படுகிறது .இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசு 7500 இரண்டாம் பரிசு ரூ 5000, மூன்றாம் பரிசு 3500 ரூபாயும் அடுத்த 7 நபருக்கு ரூ 1500 ம் வழங்கப்படுகிறது. இந்த போட்டியானது டேக்லைன் 7 வார்த்தைகள் இருக்க வேண்டும் , டேக்லைன் இந்தி அல்லது ஆங்கிலம் இருக்க வேண்டும் .

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன்படலாம் 

https://www.mygov.in/home/do/

மேலும்  உமாங் ஆப் பற்றி மத்திய அரசு சார்பில் வெளியிட்டு உள்ள போட்டிகளில் பொதுமக்கள் பங்கேற்று ரூ 30000 வரை வெல்லலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.