சைனிக் பள்ளியில் மாணர்வர்கள் சேர்க்கை தொடக்கம் : விண்ணப்பிக்க கடைசி நாள் : டிச.16
சைனிக் பள்ளிகள் என்பது மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் பள்ளியாகும் .1961 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிருஷ்ணன் மேனன் என்பவரால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது .மேலும் இந்த பள்ளியில் இந்தியாவிலுள்ள மாணவர்களை ராணுவத்தில் சேர்ப்பதற்காக தயார்படுத்தப்படும் பள்ளியாக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய பள்ளியாக திகழ்கிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்பொழுது 33 பள்ளிகள் உள்ளன.
மேலும் இந்த பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.இந்தப் பள்ளியில் படிப்பதற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்காக கல்வி உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகடமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவது படும் பள்ளியாக திகழ்கிறது. மேலும் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் அமராவதி அணைக்கு அருகே அமராவதி சைனிக் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பள்ளியானது மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உறைவிட பள்ளியாகும்
அதேபோல் இந்த பள்ளியில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் படி இயங்கும் ஆங்கில வழி பள்ளியாக இருந்தாலும் தமிழ் இந்தி ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் இந்த பள்ளியில் பின்பற்றப்படுகிறது .அதைப்போல் இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.
ராணுவ மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே இந்த பள்ளியில் சேர முடியும் .
இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில 6 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சேர்க்கைக்கு தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த கல்வியாண்டில் ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்காண தேசிய நுழைவுத் தேர்வு 2024 ல் ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது என்றும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நுழைவுத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி: https://exams.nta.ac.in/AISSEE/
விண்ணப்பிக்க கடைசி நாள்:
2023 டிசம்பர் மாதம் 16 தேதிக்குள்
விண்ணப்ப கட்டணம்..
இந்தப் பள்ளியில் படிப்பதற்கு விண்ணப்பம் கட்டமாக எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ரூ500 ரூபாயும் மற்ற பிரிவினர்களுக்கு ரூ 650 விண்ணப்ப கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
மேலும் இந்தப் பள்ளியில் படிப்பது சம்பந்தமாகவும் விண்ணப்பம் அளிக்கும் முறையை பற்றியும்
என்ற இணையதளம் முகவரி அல்லது
என்ற
மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விரிவான விளக்கங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி