கனமழை காரணமாக 4-12- 2023 பள்ளிகளுக்கு விடுமுறை,அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே சாரல் மலையும் கனமழையும் பெய்து வருகிறது இதே போல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிவ நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
புயலாக மாற வாய்ப்பு
வங்க கடலில் நிலவு வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது மேலும் தற்பொழுது வடமேற்கு மேற்கு திசையில் புயல் நகர்வதால் சென்னைக்கு கிழக்கே தென்கிழக்குபகுதியில் 500 கிலோமீட்டர்தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது நெல்லூரிலிருந்து கிழக்கு திசையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும் மசூலி பட்டணத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும் வலு பெற்று இருக்கிறது.இந்தக் காற்றழுத்து தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் இதனால் கன மழை வர வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அதன்படி சென்னைதிருவள்ளூர் மாவட்டங்களை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை மற்றும் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை 4-ம் தேதி அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் புயல் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை என்றும் மாவட்ட ஆட்சியர் ரகுநாத் சார்பில்அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் மிக்ஜாம் புயல் வருகின்ற ஐந்தாம் தேதி அன்று கரையை கடக்க உள்ளதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
தேர்வுகள் ஒத்திவைப்பு
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தொலைதூரக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி