Type Here to Get Search Results !

தமிழ் திறனாய்வு தேர்வு டிச.4ல் ரிசல்ட் வெளியீடு வெற்றி எப்படி பார்ப்பது

தமிழ் திறனாய்வு தேர்வு டிச.4ல் ரிசல்ட்  வெளியீடு வெற்றி  எப்படி பார்ப்பது 


மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது இதே போல் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பதினொன்றாம் வகுப்புமாணவர்களுக்கு தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல்வரின் கல்வி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு 1500 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் 1500 ரூபாய் என்ற விதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அன்று நடந்தது.


இதில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 910 நபர்கள் தேர்ச்சி பெற்றனர் இந்த தேர்வு முடிவுகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இந்தத் தேர்வு முடிவுகளை என்ற www.dge.tn.gov.in இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.