ஊதியத்துடன் கலை பயிற்சி அளிக்க ஆட்கள் தேர்வு
கல்வி , மருத்துவம் , விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் விவசாயம் , கல்வி உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் கலைப் பண்பாட்டு துறை மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் 100 நாட்டுப்புற கலைஞர்களை நியமிக்க கலை பண்பாட்டு துறை மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை மதுரை கோயம்புத்தூர் கும்பகோணம் மாமல்லபுரம் திருவையாறு ,ஆகிய இடங்களிலும் ,மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகள் பயிற்சி அளிப்பதற்காக முதல் கட்டமாக 100 நபர்களுக்கு கலைப் பண்பாட்டு துறையின் மூலம் ஊதியத்துடன் கூடிய ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் நான்கு வகையான கலைகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும் என்று ,மேலும் 4:00 மணி முதல் 6 மணி வரை இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலை பண்பாட்டு துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த நாட்டுப்புற கலைகள் குறித்து பயிற்சியை மேற்கொள்வதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள கிராமிய கலைஞர்களை தேர்வு செய்வதற்கும் தற்போது கலை பண்பாட்டு துறை சார்பில் அறிவிப்பு வெளியாக உள்ளது
மேலும் இந்த கலை பண்பாட்டுத் துறை மூலம் நடத்தப்படும் பயிற்சியில் சேருவதற்கும் பயிற்ச்சியினை மேற்கொள்வதற்கும் மேற்கண்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள உங்கள் மாவட்டத்தில் உள்ள கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்திற்குச் சென்று விரிவான தகவல்களைப் பெற்று பயனடையலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி