ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு - 2024
தமிழக அரசின் புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் டிரைவர், எழுத்தர் மற்றும் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு தகுந்தது போல் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பதவியின் பெயர் டிரைவர் ,கிளார்க் ஆபீஸ்அசிஸ்டன்ட், இரவு காவலர்
கல்வித் தகுதி.
டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் ஐந்து வருட பணி அனுபவத்துடன் பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர் : எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆபீஸ் அசிஸ்டன்ட் :
ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,
கிளார்க் : மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் :
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
ஆபீஸ் அசிஸ்டன்ட் : 28
கிளார்க் : 6
இரவு காவலர் : 7
டிரைவர் : 4 மொத்தம் 45
மாத ஊதியம் :
ஆபீஸ் அசிஸ்டன்ட் - கிளார்க் .இரவு காவலர் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ 15700 முதல் 58100 வரையிலும்
டிரைவர் பணியிடங்களுக்கு ரூ 19500 முதல் 71 900 ரூபாய் வரை
வயது வரம்பு :
18 வயது முதல் 32 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் காலி பணியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் கீழே உள்ள இணையதள முகவரியில் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம்
விண்ணப்ப விபரம் படிவம்
https://pudukkottai.nic.in/notice_category/recruitment/
அதிகாரப்பூர்வமான இணையதளம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி