காலி மதுபான பாட்டில் பத்து ரூபாய்க்கு வாங்கப்படும் தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகள் மற்றும் மலை பிரதேசங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மது பாட்டில்கள் வனப்பகுதியில் போடாமால் இருப்பதற்காகவும், பாட்டில்கள் வனவிலங்குகளை குத்துவதை பாதிக்கப்படுவதை தடுக்கவும், வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி உட்பட மழை பிரதேசங்களில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள மதுபான கடைகளில் குடிமகன்கள் மதுபான பாட்டில்களை ஆங்காங்கே வீசி செல்லாமல் இருப்பதற்காக மது பாட்டில்கள் வாங்கும் பொழுது அரசு நிர்ணயிக்கும் விலையை காட்டிலும் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு அந்த எம்டி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூபாய் 10 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் மலை பிரதேசங்களில் உள்ள மதுபான கடைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது இதே போல் முதல் முயற்ச்சியாக மேலும் 5 மாவட்டங்களில் அதிரடியாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்பொழுது திருவாரூர், நாகை, குமரி தேனி தர்மபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுபான விலையுடன் கூடுதலாக ரூபாய் பத்து ரூபாய் பெறப்படும் என்றும், இந்த கூடுதலாக வசூலிக்கப்படும் மதுபாட்டில்களை மது அருந்திவிட்டு ஆங்காங்கே வீசு செல்லாமல் ,காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொழுது ரூபாய் பத்து ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இதனால் பொதுமக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் எண்ணம் உள்ள சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில் மதுபாட்டில்கள் குடிமகன்கள் வாங்கும் போது கூடுதலாக வசூலிக்கும் போது வாக்கு வாக்குவாதம் ஏற்படும் என்றும் , காலி பாட்டில்களை வசூலிக்க கூடுதல் ஆட்கள் இல்லை என்றும் டாஸ்மாக் மதுபான கடைகளின் பணியாளர்கள் மத்தியில் கூடுதல் பணி சுமை உண்டாக வாய்ப்பு உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி