தடைகளை கடந்து மருத்துவரான 3 அடி உயரமுள்ள இளைஞர்
இளைஞர்களை கனவு காணுங்கள் என்று நம்முடைய முன்னாள் குடியரசு தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் கூறியுள்ளார் .மேலும் இளைஞர்களுக்கு அவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் கனவு லட்சியங்கள் இருந்து வருகின்றன. ஒருவருக்கு செல்வாக்கு இருந்தால் படிப்பு இருப்பதில்லை படிப்பு இருந்தால் செல்வாக்கு இல்லாமல் படிப்பினை தொடர முடியாமால் தடைபட்டு வருகிறது.
பல்வேறு மேல்படிப்புகளை படிப்பதற்கு ஒரு சிலர் பல்வேறு வசதிகள் கிடைக்காத நிலையில் சீறிய முயற்சியினால் பெரிய லட்சியத்தை அடைந்து விடுகின்றனர். அதேபோல் வாழ்க்கையில் பாதி நபர்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கொடி கட்டி பறந்து வருகின்றனர்.
இப்படி கல்வி விளையாட்டு மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால் பல்வேறு தடைகளை கடந்து வெற்றி பெறுபவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள்
அந்த வகையில் பல்வேறு தடைகளை கடந்தும் சீரிய முயற்சியினால் மருத்துவராக முன்னேற்றம் அடைந்துள்ளார். அதுவும் மூணு அடி உயரமுள்ள இளைஞர்
குஜராத் மாநிலத்தின் பாவ் நகரை சேர்ந்தவர் கணேஷ் பாரையா . இவர் 72% உயர குறைபாடுடன் பிறந்த இவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதல் இருந்து வந்துள்ளது. மேலும் இவர மூணு அடி உயரம் இருந்து வந்ததினால் இவரால் அவசர காலத்தில் நோய்களை சிகிச்சை மேற்கொள்வது கடினம் என்று தகவல் வந்தது
இவருடைய உயரத்தை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவச் சேர்க்கைக்கானவிண்ணப்பத்தை நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது
மேலும் இவருடைய உயரம் குறைபாடு படிப்புக்கு சம்பந்தமில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் இவருடைய ஆசிரியர் உதவியுடன் வழக்கு போடப்பட்டது
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம்
பாவ் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் சேர்க்க அனுமதி அளித்தது .இந்த அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டு கணேஷ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி படிப்பினை முடித்து தற்போது பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்
மருத்துவம் மற்றும் உயர்கல்விகளில் படிப்பதற்கு உயரம் தடை இல்லை என்பதை நிரூபித்து பல்வேறு தடைகளையும் தாண்டி மருத்துவதாக மாறிய கணேசன் முயற்சியை பார்த்து அனைவரும் பாராட்டி வருகிறார்கள்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி