மார்ச் 8-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் எட்டாம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
மகா சிவராத்திரி முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும், மகா சிவராத்திரியை முன்னிட்டு விடப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று வேலை நாளாக கருதப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 படிஅறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் மாதம் எட்டாம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை நாளன்று தலைமை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர கால அலுவல்களை பணிகளை மேற்கொள்ளும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்கள் மூலம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி