மருந்து கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவு
சென்னை மாவட்டம் சார்பில் புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது அந்த உத்தரவின் படி சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்து கடைகளில் 5.3.2024 முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் ,தவறினால் மருந்துக உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மேலும் அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940மற்றும் 1945அட்டவணை " X""மற்றும் "H" , H 1, Drugs குறிப்பிடப்பட்டுள்ள மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்து கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133 -ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தவறும் பட்சத்தில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி